கீழ்பாக்கம் மனநல மருத்துவமனையில் வாக்குப்பதிவு

மக்களவை தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள் மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அனைத்து பொதுமக்களும் உற்சாகமாக தங்களது வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.

இந்நிலையில், முதன்முறையாக மனநல மருத்துவமனையில் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. சென்னை கீழ்பாக்கம் மனநல மருத்துவமனையில், மன நோயாளிகளுக்காக அங்கு பிரத்யேகமான முறையில் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன.

அங்கு சிகிச்சை பெற்று வரும் 159 பெரும் தங்களது வாக்குகளை பதிவு செய்துள்ளனர். தங்களது வாக்குகளை பதிவு செய்யும் அளவுக்கு அவர்களது உடல்நலம் சீராக உள்ளது.

Leave a Comment