Categories: இந்தியா

காஷ்மீர் பகுதிகளில் ரெயில் போக்குவரத்து நிறுத்தம்..!

காஷ்மீர் பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே அசாதாரண சூழ்நிலை நிலவி வருகிறது. மேலும் அனந்த்நாக் மற்றும் பாரமுல்லா பகுதிகளில் பயங்கரவாதிகள் சிலரால் வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இதனிடயே பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிகளில் இயங்கி வரும் ரெயில் சேவை இன்று நிறுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து மூத்த ரெயில்வே அதிகாரி ஒருவர் கூறுகையில், ”வடக்கு காஷ்மீர் பகுதியில் ஸ்ரீ நகர், பட்காம், பாரமுல்லா ஆகிய பகுதிக்கு செல்லும் ரெயில்கள் மற்றும் தெற்கு காஷ்மீர் பகுதிகளில் இயக்கப்படும் ரெயில்களின் சேவையும் இன்று நிறுத்தப்பட்டுள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் ரெயில் சொத்துகளை பாதுகாக்கும் விதமாக போலீசாரின் அறிவுறுத்தலின் படி, காஷ்மீரில் ரெயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் பல்வேறு தாக்குதல் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் சம்பவங்களில் ரெயில் சொத்துகள் கடுமையாக சேதப்படுத்தப்பட்ட காரணங்களுக்காகவே தற்போது இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன” எனக் கூறினார்.
காஷ்மீரில் நடக்கும் தொடர் தாக்குதல் சம்பவங்களினால் கடந்த மாதம் மட்டும் சுமார் 14 முறை ரெயில்களின் சேவை நிறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Dinasuvadu desk

Recent Posts

எங்க திட்டம் தான் எங்களுக்கு கை கொடுத்துச்சு – தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி !!

Varun Chakravarthy : நேற்றைய போட்டி முடிந்த பிறகு கொல்கத்தா அணியின் மிஸ்ட்ரி ஸ்பின்னர் வருண் சக்கரவர்த்தி  வெற்றி பெற்றதை பற்றி பேசி  இருந்தார். ஐபிஎல் தொடரின்…

36 seconds ago

உங்க போன் ரொம்ப ஹீட் ஆகுதா? அப்போ உடனே இதெல்லாம் பண்ணுங்க!

Mobile Heat Solution : இந்த கோடை காலத்தில் போன் ரொம்பவே ஹிட் ஆகிறது என்றால் ஹீட் குறைய கீழே டிப்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. நம்மில் பலருக்கும் போனில்…

13 mins ago

கிராமத்து ஸ்டைல் மீன் குழம்பு செய்வது எப்படி ?

மீன் குழம்பு -வித்தியாசமான சுவையில் மீன் குழம்பு செய்வது எப்படி என்று இப்பதிவில் காண்போம். தேவையான பொருட்கள்; மீன் =அரை கிலோ நல்லெண்ணெய் =3 ஸ்பூன் சீரகம்=அரை…

1 hour ago

காங். பிரமுகர் கொலை.! என்மீது அபாண்டமான குற்றசாட்டு… ரூபி மனோகரன் பேட்டி.

Jayakumar Dead Case : காங். பிரமுகர் ஜெயக்குமார் கொலை சம்பவத்தில் என்மீது அபாண்டமான குற்றசாட்டை சிலர் கூறுகிறார்கள். - காங். எம்எல்ஏ ரூபி மனோகரன். நெல்லை…

1 hour ago

வணிகர் தின மாநில மாநாடு …! நாளைக்கு எல்லா கடைக்கும் லீவ் !

Madurai Merchant Conference : மதுரை மாநாட்டில் வணிகர்கள் ஒன்று கூடவுள்ளதான் காரணமாக தமிழகம் முழுவதும் நாளை அனைத்து கடைகளும் மூடப்படவுள்ளது. நாளை வாரத்தின் கடைசி நாளான…

2 hours ago

சிறப்பு வகுப்பு நடத்தினால் பள்ளிகள் மீது நடவடிக்கை – பள்ளிக்கல்வித்துறை அதிரடி.!

TN School : கோடை விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கோடை வெப்பம் நிலவும் நிலையில், சிறப்பு…

2 hours ago