கதறி அழுத நக்கல் நாயகன் காரணம் இதுவா!

நடிகர் சத்யராஜ் தமிழ் சினிமாவில் நடிப்பில் மட்டுமல்ல நிஜ வாழ்விலும் நக்கல் நையாண்டியுடன் பேசுபவர் .

இவர் தமிழர்களுக்கான போராட்டங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். நேற்று இயக்குனர் பாலுமகேந்திராவின் பெயரில் நூலகம் திறக்கப்பட்டது.

இந்தவிழாவில் பங்கேற்ற சத்யராஜ், பாலுமகேந்திராவின் படத்தில் நடிக்க விரும்பியது பற்றியும், அவரிடம் பாராட்டு வாங்கியது பற்றியும், புத்தகங்கள் தன்வாழ்வில் ஏற்படுத்திய தாக்கத்தை பற்றியும் பகிர்ந்து கொண்டார்.

சமஸ்கிருதம், ஹிந்தி மொழிகள் கற்க வேண்டியது எந்த வகையிலும் கட்டாயமில்லை என்று நகைச்சுவையாக பேசி வந்தவர் திடிரென சமீபத்தில் காஷ்மீரில் கொடூரமாக பாலியல் துன்புறுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட ஆசிபாவை பற்றி பேச முயன்றார்.

ஆனால் அவரையறியாமல் கண்கள் தழுதழுக்க பேசமுடியாமல் மௌன அஞ்சலி செலுத்தினார்.

Leave a Comment