இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தொடர் அட்டவணை கேலிக்குரிய வகையில் அமைக்கப்பட்டுள்ளது’ என்று இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
இது குறித்து இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் பெய்லிஸ் கருத்து தெரிவிக்கையில், ‘6 வாரங்களில் 5 டெஸ்ட் போட்டியில் இந்திய அணியுடன், நாங்கள் விளையாட வேண்டும் என்பது உண்மையிலேயே சவாலானதாகும். இது பந்து வீச்சாளர்கள் அனைவருக்கும் நெருக்கடியாக இருக்கும். இந்த போட்டி தொடருக்கு முன்பாக முழு உடல் தகுதியை எட்டுவதற்காக ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு போதிய ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது’ என்றார்.
இதற்கிடையில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் இயான் சேப்பல் அளித்த ஒரு பேட்டியில், ‘இங்கிலாந்து அணியின் பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் தடுமாற்றம் இருக்கிறது. எனவே இங்கிலாந்து பயணத்தில் இந்திய அணி டெஸ்ட் தொடரை வெல்ல நல்ல வாய்ப்பு உள்ளது. இதேபோல் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரிலும் இந்திய அணி தொடரை வெல்ல வாய்ப்பு இருக்கிறது’ என்று தெரிவித்தார்
Andhra pradesh: ஆந்திராவில் ரூ.2,000 கோடி பணத்துடன் சென்ற 4 கண்டெய்னர்கள் பிடிபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திராவில் மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதால் பறக்கும்…
Indian Team : டி20 அணியை அறிவித்த பிறகு இந்திய அணியில் இடம்பெற்றுள்ள சில வீரர்கள் அடுத்தடுத்து ஐபிஎல் போட்டியில் சொதப்பி வருவதால், ரசிகர்கள் கவலையில் இருக்கின்றனர். வருகிற…
Prajwal Revanna : கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் ரேவண்ணா முயற்சித்துள்ளார் என கர்நாடகா காங்கிரஸ் அமைச்சர் சர்ச்சையாக கருத்து தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி…
Annamalai Biopic : தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் வாழ்கை வரலாற்று படம் எடுக்கப்படவுள்ளதாகவும் அதில் விஷால் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள்,…
Weather Update : அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வெயில் வாட்டி…
முருங்கைக்காய் கிரேவி- முருங்கைக்காய் கிரேவி செய்வது எப்படி என்று பதிவில் காண்போம். தேவையான பொருட்கள் : முருங்கைக்காய் =3 வெங்காயம்=2 தக்காளி =2 சீரகம்=1 ஸ்பூன் எண்ணெய்…