தமிழ்நாடு அருந்ததியர் சங்கம் சார்பில் ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஒருநாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. போராட்டத்துக்கு மாவட்ட தலைவர் முனியராசு தலைமை தாங்கினார்.
துணை தலைவர் செபஸ்தியான், துணை செயலாளர் மூக்கையா, பொருளாளர் மோகன்ராம், அமைப்பு செயலாளர் கர்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் அழகர் வரவேற்று பேசினார். போராட்டத்தை மாநில பொது செயலாளர் வரதராஜ் தொடங்கி வைத்தார்.
இதில் தமிழ்நாடு அருந்ததியர் சங்க தலைவர் நாகலிங்கம் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.
இதில் தீண்டாமை வன்கொடுமை சட்டத்தை எவ்வித தடையுமின்றி தொடர்ந்து நடைமுறைப்படுத்த வேண்டும், தமிழகத்தில் அருந்ததியருக்கு 6 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும், ஆதிதிராவிட நல மாணவ–மாணவிகள் விடுதிகளில் போதிய அடிப்படை வசதிகள் செய்ய வேண்டும்,
ஊராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு மாதம் ரூ.15,000–ம் சம்பளம் வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நிர்வாகிகள் பேசினர். முடிவில் மாவட்ட துணைத்தலைவர் மலைராஜ் நன்றி கூறினார்.
Switzerland : சுவிட்சர்லாந்த் நாட்டில் புலம்பெயர்ந்து வாழும் வெளிநாட்டு மக்களுக்கு ஆதரவாக தற்போது சுவிட்சர்லாந்த் அரசு சட்ட திருத்தும் செய்ய போவதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இதே…
Bhuvneshwar Kumar : ராஜஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் 3 விக்கெட் எடுத்த புவனேஷ்வர் குமாரை இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது கைஃப் …
Weather Update: கத்திரி வெயில் நாளை முதல் தொடங்கவுள்ள நிலையில், மழை பெய்யும் எனவும் வானிலை மையம் கணித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,…
Vijayakanth: மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது வழங்கப்பட்டுள்ளது. மறைந்த கேப்டன் விஜயகாந்த் எந்த அளவிற்கு நல்ல மனிதர் என்பதனை பற்றி சொல்லியே…
Kerala : கேரள மாநிலம் கொச்சியில் பச்சிளம் குழந்தையை பொட்டலம் கட்டி வீசப்பட்ட சம்பம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவின் கொச்சியின் பனம்பில்லி நகர் வித்யா நகர்…
Prajwal Revanna : பாலியல் புகாரில் சிக்கிய மஜத எம்.பி பிரஜ்வலை பிடிக்க சிறப்பு புலனாய்வு குழு ஜெர்மனி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பாலியல்…