ஜல்லிக்கட்டு போராட்டம் போல் மாணவர்கள் ஒன்று திரண்டு விடக்கூடாது..!!என மெரினா கடற்கரையில் போலீஸ் குவிப்பு..!!

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடி மக்கள் நடத்திய முற்றுகை போராட்டத்தில் போலீஸ் துப்பாக்கி சூடு நடத்தியதில் 10 பேர் பலியான சம்பவம் தமிழகத்தையே உலுக்கி உள்ளது. நெஞ்சை பதற வைத்த பயங்கர சம்பவம் மக்களின் மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து சென்னையில் பல்வேறு அமைப்புகள் போராட்டங்களை அறிவித்துள்ளன. புரட்சிகர மாணவர்கள் அமைப்பினர் கோட்டை முற்றுகை போராட்டத்தை அறிவித்தனர்.


மேலும் பல மாணவர் சமூக பொது நல அமைப்புகள் மெரினாவில் திரள்வதாக தகவல் பரவின. இதையடுத்து போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர். மெரினா கடற்கரை சாலையில் கூட்டமாக வந்தால் அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்ய வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. டி.ஜி.பி. அலுவலகம் முதல் அண்ணா சமாதி வரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். ரிசர்வ் வங்கி பகுதியில் நிறுத்தப்பட்டுள்ள போலீசார் தீவிரமாக கண்காணித்தனர்.


ஜல்லிக்கட்டு போராட்டம் போல் மாணவர்கள் ஒன்று திரண்டு விடக்கூடாது என்பதில் போலீசார் கவனமாக இருந்தனர். சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை ரோடு உள்ளிட்ட கடற்கரை சாலைக்கு செல்லும் அனைத்து பாதைகளிலும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 3 இணை கமி‌ஷனர்கள் மேற்பார்வையில் உதவி கமி‌ஷனர்கள், இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் போலீஸ்படை குவிக்கப்பட்டு இருப்பதால் மெரினா சாலை வாகனங்கள் அதிகமின்றி வெறிச்சோடியது

போரட்டக்காரர்கள் எந்த வழியாக வந்தாலும் அவர்களை தடுத்து நிறுத்த வேண்டும் என்று போலீசாருக்கு உயர் அதிகாரிகள் ஆலோசனை வழங்கி இருப்பதால் பாரி முனை, சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, கலங்கரை விளக்கம், பட்டினம்பாக்கம் உள்ளிட்ட மீனவப் பகுதிகளிலும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

வன்முறை சம்பவத்திற்கு மீண்டும் இடமளிக்காத வகையில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீஸ் செய்துள்ளது. தலைமை செயலகத்திற்கு பணிக்கு செல்லக்கூடிய ஊழியர்கள் கூட தீவிர சோதனைக்கு பிறகே அனுப்பப்பட்டனர். தலைமை செயலகம் எதிரே நூற்றுக்கும் அதிகமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னையில் எந்த பகுதியில் போராட்டம் நடந்தாலும் அதனை முறையாக கையாள வேண்டும் என்று போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்

kavitha

Recent Posts

கண்டிப்பா மாற்றம் இருக்கு… வெறுப்புக்கு எதிராக நான் வாக்களித்தேன் – பிரகாஷ் ராஜ்

Election2024: வெறுப்பு அரசியலுக்கு எதிராக நான் வாக்களித்து உள்ளேன் என்று நடிகர் பிரகாஷ்ராஜ் பேட்டியளித்துள்ளார். நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான இரண்டாம் வாக்குப்பதிவு இன்று 7 மணி முதல்…

28 mins ago

42-வது ஐபிஎல் போட்டி .. கொல்கத்தா – பஞ்சாப் இன்று பலப்பரீட்சை !

ஐபிஎல் 2024 : இன்றைய ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியும், பஞ்சாப் அணியும் மோதிகிறது. ஐபிஎல்லின் 17-வது தொடரின் 42-வது போட்டியாக இன்றைய நாளில் கொல்கத்தா நைட்…

56 mins ago

சுட்டெரிக்கும் வெயில்…பொதுமக்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோள்.!

MK Stalin: கோடை வெயிலில் இருந்து மக்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழ்நாட்டில் வாட்டி வதைத்து வரும் வெயிலின் தாக்கம் நாளுக்கு…

1 hour ago

இந்திரா காந்தியின் சொத்துக்களை பாதுகாக்கவே பரம்பரை சொத்து வரி ரத்து செய்யப்பட்டது – பிரதமர் மோடி விமர்சனம்!

PM Modi: இந்திரா காந்தியின் சொத்துக்களை பாதுகாக்கவே பரம்பரை சொத்து வரியை ராஜிவ் காந்தி ரத்து செய்தார் என பிரதமர் மோடி கூறிஉள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ்…

2 hours ago

தான்சானியாவில் கனமழை, வெள்ளத்தில் சிக்கி 155 பேர் பலி.!

East Africa: தான்சானியா நாட்டில் பெய்த கனமழை மற்றும் வெள்ளத்தால் 155 பேர் உயிரிழந்துள்ளனர், 236 பேர் காயம் அடைந்துள்ளனர். கிழக்கு ஆப்ரிக்க நாடான தான்சானியாவில் கனமழையைத்…

2 hours ago

13 மாநிலங்களில் 88 தொகுதிகளில் 2ம் கட்ட வாக்குப்பதிவு தொடக்கம்.!

Elections 2024: மக்களவைத் தேர்தலுக்கான 2ஆம் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் 2ஆம் கட்டமாக கர்நாடகா, கேரளா,…

3 hours ago