ஓசூரில் போலி பணி ஆணை வழங்கி வாலிபரிடம் ரூ.2.50 லட்சம் மோசடி..!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மின்வாரிய அலுவலகத்தில் பணிபுரிந்து வந்த ஒருவர், வாலிபர் ஒருவரிடம் கணக்காளர் வேலை இருப்பதாக கூறி கிருஷ்ணகிரி மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் நந்தகோபாலின் கையெழுத்திட்ட பணி ஆணை வழங்கி உள்ளார்.

மேலும் அதற்காக வாலிபரிடம் இருந்து அந்த மின்வாரிய அலுவலர் ரூ.2.50 லட்சம் பெற்றுக் கொண்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அந்த வாலிபர் பணி நியமன ஆணையை பொறியாளர் நந்தகோபாலிடம் வழங்கினார். அப்போது அதில் உள்ள கையெழுத்து தன்னுடையது இல்லை எனவும், அது போலியான பணி நியமன ஆணை எனவும் பொறியாளர் தெரிவித்தார்.

இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் அந்த பணி நியமன ஆணையை கொடுத்தது ஓசூர் மின் வாரிய அலுவலகத்தில் பணிபுரிந்து வந்த அந்த நபர் என தெரிய வந்தது. இது குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மின்வாரிய பொறியாளர் நந்தகோபால் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஷ்குமாரிடம் புகார் செய்தார்.

இது தொடர்பாக போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். அந்த நபர் இதை போல வேறு யாருக்கும் பணி நியமன ஆணை வழங்கி மோசடியில் ஈடுபட்டுள்ளாரா? என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

Dinasuvadu desk

Recent Posts

தூங்கிக்கொண்டு இருந்த வாட்ச்மேன்! கேட் ஏறி விஜயகாந்த் செஞ்ச விஷயம்?

Vijayakanth : வாட்ச் மேன் தூங்கிக்கொண்டு இருந்தபோது விஜயகாந்த் செய்த நெகிழ்ச்சியான சம்பவம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. கேப்டன் விஜயகாந்த் சாப்பாடு போட்டு உதவி செய்வது பலருக்கும்…

11 mins ago

வாக்குப்பதிவு ஒப்புகை சீட்டு வழக்கு… உச்சநீதிமன்ற தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்.!

VVPAT Case : 100% தேர்தல் ஒப்புகை சீட்டு சரிபார்ப்பு கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்ட உச்சநீதிமன்ற தீர்ப்பின் முக்கிய அம்சங்களை இதில் காணலாம். தேர்தல் வாக்குப்பதிவின் போது, EVM மிஷினில்…

18 mins ago

மூன்று விண்வெளி வீரர்களை விண்ணுக்கு அனுப்பிய சீனா.. காரணம் என்ன?

China: சீனா தனக்கென சொந்தமாக உருவாக்கியுள்ள விண்வெளி நிலையத்திற்கு 3 விண்வெளி வீரர்களை 6 மாத பணிக்காக அனுப்பியுள்ளது. விண்வெளியில் ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்காக ரஷ்யா உட்பட உலக…

36 mins ago

மீண்டும் ஏகிறியது தங்கம் விலை…சவரன் ரூ.360 உயர்வு.!

Gold Price: ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று குறைந்த நிலையில், இன்று சற்று அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி…

54 mins ago

கில்லி படத்தில் ரஜினியை பார்த்து தான் விஜய் நடிச்சாரு! இயக்குனர் தரணி சொன்ன சீக்ரெட்!

Ghilli : கில்லி படத்தில் ரஜினியின் ஒரு படத்தின் கதாபாத்திரத்தை பார்த்து தான் விஜய் நடித்தார் என தரணி கூறியுள்ளார். நடிகர் விஜயின் சினிமா கேரியரில் பல…

1 hour ago

இந்தியாவில் நடைபெற வாய்ப்பு அதிகம் !! இந்திய செஸ் சம்மேளனம் தகவல் !!

Chess Championship 2024 : உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி இந்தியாவில் நடைபெற வாய்ப்பு இருப்பதாக தேவ் படேல் தெரிவித்து இருக்கிறார். கனடாவில் டொராண்டோ நகரில் நடத்தப்பட்ட பிடே…

1 hour ago