தமிழ்நாடு-கேரளா எல்லையில் 2,660 வீடுகளில் ஜிகா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்று மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
கேரளாவில் கொரோனா வைரஸ்களுக்கு அடுத்தப்படியாக ஜிகா வைரஸ் தொற்று பரவி வருகிறது. இதுவரை அம்மாநிலத்தில் 15 பேருக்கு தொற்று உறுதியாக்கிருப்பதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு-கேரளா எல்லையில் பரிசோதனை அதிதீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
கொசுக்கள் மூலம் பரவும் வைரஸ் என்பதால் இந்த வைரசுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளை வேகமாக எடுத்து வருகின்றனர். இது குறித்து தமிழக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் கூறியுள்ளதாவது,
தமிழக-கேரள எல்லையில் உள்ள 2,660 வீடுகளுக்கு ஜிகா வைரஸ் பரிசோதனை மேற்கொண்டதில் யாருக்கும் தொற்று உறுதியாகவில்லை. கேரளாவிலிருந்து தமிழகத்திற்கு வரும் அனைத்து வித பயணிகளுக்கும் சோதனை நடத்தப்படுகிறது. மேலும், பேருந்து, ரயில் மற்றும் லாரிகளில் வருபவர்களுக்கும் ஜிகா வைரஸ் பரிசோதனை நடத்தப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.
Andhra pradesh: ஆந்திராவில் ரூ.2,000 கோடி பணத்துடன் சென்ற 4 கண்டெய்னர்கள் பிடிபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திராவில் மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதால் பறக்கும்…
Indian Team : டி20 அணியை அறிவித்த பிறகு இந்திய அணியில் இடம்பெற்றுள்ள சில வீரர்கள் அடுத்தடுத்து ஐபிஎல் போட்டியில் சொதப்பி வருவதால், ரசிகர்கள் கவலையில் இருக்கின்றனர். வருகிற…
Prajwal Revanna : கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் ரேவண்ணா முயற்சித்துள்ளார் என கர்நாடகா காங்கிரஸ் அமைச்சர் சர்ச்சையாக கருத்து தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி…
Annamalai Biopic : தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் வாழ்கை வரலாற்று படம் எடுக்கப்படவுள்ளதாகவும் அதில் விஷால் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள்,…
Weather Update : அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வெயில் வாட்டி…
முருங்கைக்காய் கிரேவி- முருங்கைக்காய் கிரேவி செய்வது எப்படி என்று பதிவில் காண்போம். தேவையான பொருட்கள் : முருங்கைக்காய் =3 வெங்காயம்=2 தக்காளி =2 சீரகம்=1 ஸ்பூன் எண்ணெய்…