விவசாயிகள் எதிர்கொள்ளும் வெட்டுகிளிகளின் அட்டாகாசம் குறித்து சிம்புவின் காளை பட நடிகையான மீரா சோப்ரா ஆவேசமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
2005ல் எஸ். ஜே.சூர்யாவிற்கு ஜோடியாக அன்பே ஆருயிரே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை நிலா என்ற மீரா சோப்ரா. இந்த படத்திலுள்ள மயிலிறகே மயிலிறகே பாடல் அனைவர் மனதையும் ஈர்க்கும். அதனையடுத்து மருதமலை, காளை, இசை போன்ற தமிழ் படங்களில் நடித்துள்ளார். அது மட்டுமின்றி தெலுங்கு மற்றும் இந்தி படங்களிலும் நடித்து முன்னணி நடிகையானார்.
தற்போது உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த போராடி வரும் இந்த சூழ்நிலையில் புதிதாக வெட்டுகிளிகள் படையெடுத்து விவசாய நிலங்களை சூறையாடி வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் விவசாயிகள் தங்களது நிலத்தை பாதுகாக்க இயலாமல் பெரிதும் வருத்தத்தில் உள்ளனர். தற்போது இந்த வெட்டுகிளிகளின் தாக்கம் ஊட்டி மற்றும் கிருஷ்ணகிரி போன்ற பகுதிகளிலும் தொடங்கி விட்டதாக கூறப்படுகிறது. இது ஒரு புறம் இருக்க இன்னொரு புறம் இந்த வெட்டுகிளிகளை பிடித்து உணவுக்காக விற்கும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. அதனை கண்ட மீரா சோப்ரா தனது டுவிட்டர் பக்கத்தில் உணவுக்காக வெட்டுகிளிகளை விற்பனை செய்யும் வீடியோவை பார்த்தேன் என்றும், இந்த வீடியோ உண்மையானதா? என்றும், மக்கள் உண்மையிலேயே வெட்டுகிளிகளை சாப்பிடுகிறார்களா? என்றும் கேட்டுள்ளார். தற்போது எதிர்கொண்டிருக்கும் கொரோனாவிடமிருந்து இன்னுமா பாடம் கற்றுக் கொள்ளவில்லை என்று பதிவிட்டுள்ளார்.
IPL2024: பஞ்சாப் அணி 17.5 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 163 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டை வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில் சென்னை அணியும்,…
Mutton pickle-மட்டன் ஊறுகாய் செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம் . தேவையான பொருட்கள் : மட்டன் =1/2 கிலோ மஞ்சள் தூள் =1 ஸ்பூன்…
8 வடிவ நடை பயிற்சி-எட்டு வடிவ நடை பயிற்சி செய்யும் முறை அதன் பயன்கள்,தவிர்க்க வேண்டியவர்கள் பற்றி இப்பதிவில் காணலாம். 8 வடிவ நடை பயிற்சி செய்யும்…
Heat Wave : வழக்கத்தை விட இந்தாண்டு வெப்பநிலை அதிகரிக்க 2 காரணங்களை இந்திய வானிலை ஆய்வு மைய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். வழக்கத்தை விட இந்தாண்டு வெயிலின்…
Mumbai Indians : ஐபிஎல் தொடரில் நட்சித்திர அணியான மும்பை இந்தியன்ஸ் 7 தோல்விகளுக்கு பிறகும் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெரும் வாய்ப்புகளை பற்றி பார்ப்போம்.…
Virudhunagar: விருதுநகர் மாவட்டத்தில் கல்குவாரி ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். விருதுநகர் அருகே ஆவியூரில் உரிமம் பெற்ற கல் குவாரியும், வெடி…