இங்கிலாந்து அணிக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்றால், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் சாதனையை முறியடிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.
இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது பகல்-இரவு டெஸ்ட் போட்டி, அஹமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று பகல் – இரவு போட்டியாக நடைபெற்று வருகிறது. உலகிலேயே மிகப்பெரிய மைதானமான இதில் 1,10,000 ரசிகர்கள் அமர்ந்து போட்டியை காணலாம். இந்த போட்டியை காண 50 சதவீத ரசிகர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. இதில் இந்திய அணியின் பந்துவீச்சை தாங்காமல் இங்கிலாந்து அணி, 48.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 112 ரன்கள் மட்டுமே அடித்தது. தற்பொழுது இந்திய அணி, முதல் இன்னிங்க்ஸை தொடங்கியுள்ளது. இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் தோனியின் சாதனையை கோலி முறியடிப்பார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான தோனி, இதுவரை உள்நாட்டு டெஸ்ட் போட்டிகளில் 21 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளார். தற்பொழுது இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால், தோனியின் சாதனையை முறியடித்து, சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரில் அதிக வெற்றிகளை பெற்ற கேப்டன் என்ற பெருமையை அடைவார்.
அதுமட்டுமின்றி, சர்வதேச போட்டிகளில் அதிக சதங்கள் அடித்த பட்டியலில் சச்சின், 100 சதங்கள் அடித்து முதலிடத்தில் உள்ளார். அவரைதொடர்ந்து ரிக்கி பாண்டிங், 71 சத்தங்கள் அடித்து இரண்டாம் இடத்தில் இருக்கின்றார். 70 சதங்களுடன் கோலி, மூன்றாம் இடத்தில் இருக்கும் நிலையில், இன்னும் ஒரு சதம் அடித்தால் ரிக்கி பாண்டிங்கை முந்தி, கோலி இரண்டாம் இடத்தை பிடிப்பார்.
சென்னை : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் ஹைதராபாத் அணியும், பஞ்சாப் அணியும் மோதுகிறது. நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரில் இன்றைய 69-வது போட்டியாக இன்று…
IPL2024: சென்னை அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 191 ரன்கள் எடுத்தனர். இதனால் பெங்களூர் அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய…
சென்னை: ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக்கில் தம்பதி மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிசூடு நடத்தியுள்ளனர். ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் பகுதியில் ஓர் தம்பதி மீது பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியுள்ளனர்.…
சென்னை : ஐபிஎல் தொடரின் இறுதி போட்டியானது முடியும் முன்னரே டி20 உலகக்கோப்பை அணியில் இடம் பெற்றுள்ள இந்திய வீரர்கள் நியூயார்க் புறப்பட உள்ளனர். இந்த ஆண்டு ஜூன்…
சென்னை: கனமழை எதிரொலியை தொடர்ந்து சுற்றுலா பயணிகளுக்கு பேரிடர் மேலாண்மைத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கனமழை பெய்து வரும் நிலையில், ஒரு சில…
சென்னை: நாளை காலை பாஜக அலுவலகம் முன்பு அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் முற்றுகை போராட்டம் நடைபெற உள்ளது. டெல்லி மாநில முதல்வரும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான…