ஜனவரி மாதம் RRR, ராதே ஷியாம், பீம்லா நாயக் ஆகிய படங்கள் வெளியாவதால், தெலுங்கில் அதே தேதியில் சூர்யாவின் படத்தை வெளியிடுவதில் சிக்கல் வரும் என்பதால் தான் எதற்கும் துணிந்தவன் பிப்ரவரி 4ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது என கூறப்படுகிறது.
சூர்யா நடிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் எதற்கும் துணிந்தவன். குடும்ப செண்டிமெண்ட் ஆக்சன் கதைக்களமாக உருவாகி வரும் இந்த திரைப்படத்தை சன் பிக்ச்சர்ஸ் தயாரித்து வருகிறது. டி.இமான் இசையமைத்து வருகிறார்.
இந்த படத்தில் வினய் வில்லனாக நடிக்கிறார். பிரியங்கா மோகன் ஹீரோயினாக நடிக்கிறார். சத்யராஜ், ராஜ்கிரண், சூரி என பலர் நடித்துள்ளனர். இப்படம் பொங்கல் ரிலீசாக வெளியாகும் என எதிர்பார்த்த நிலையில், இப்படம் பிப்ரவரி 4ஆம் தேதி வெளியாகும் என் படக்குழு அறிவித்துவிட்டது.
சூர்யாவிற்கு தமிழை போல தெலுங்கு சினி உலகிலும் நல்ல மார்க்கெட் உள்ளது. சூர்யா படம் நேரடி தெலுங்கு படம் போல வெளியாகும். ஜனவரி 7ஆம் தேதி ராஜமௌலியின் RRR திரைப்படம் வெளியாகிறது. ஜனவரி 14ஆம் தேதி பிரபாஸ் நடிக்கும் ராதே ஷியாம் மற்றும் பவன் கல்யாணின் பீம்லா நாயக் ஆகிய படங்கள் வெளியாக உள்ளன.
ஆதலால், இந்த படங்களுக்கே அங்கு தியேட்டர் கிடைப்பது கஷ்டம் என்பதால், சூர்யாவின் எதற்கும் துணிந்தவனுக்கு தியேட்டர் கிடைப்பது கடினம் என்பதால் பிப்ரவரி 4ஆம் தேதியை படக்குழு ரிலீஸ் தேதியாக அறிவித்துவிட்டதாம்.
சென்னை : மலையாள சினிமாவில் இந்த ஆண்டு 5 மாதங்களில் வெளியான படங்களின் வசூல் அனைத்தையும் சேர்த்து 1000 கோடிகளுக்கு மேல் வந்துள்ளது. மலையாள சினிமாவில் இந்த…
சென்னை : ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி உயிரிழந்த நிலையில், ஈரானின் புதிய அதிபராக துணை ஜனாதிபதி முகமது முக்பர் பதவியேற்க உள்ளார். ஈரான் அதிபர் இப்ராஹிம்…
சென்னை: போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ஜாபர் சாதிக் மனைவியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தினர். சென்னையை சேர்ந்த முன்னாள் அரசியல் பிரமுகர், திரைப்பட தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் போதை…
Vastu-ஏழு குதிரை வாஸ்து படத்தின் பலன்கள் மற்றும் வைக்க வேண்டிய திசைகள் பற்றி இப்பதிவில் காணலாம். வாஸ்துவின் மீது நம்பிக்கை உள்ளவர்கள் இந்த ஏழு குதிரை படத்தை…
சென்னை: சத்தீஸ்கர் மாநிலம் கவர்தா மாவட்டத்தில் பிக்கப் வாகனம் கவிழ்ந்ததில் 18 பேர் உயிரிழந்தனர் மற்றும் 4 பேர் காயமடைந்தனர். இன்று அதிகாலையில் டெண்டு இலைகளை பறித்துவிட்டு…
சென்னை: அகமதாபாத் விமான நிலையத்தில் 4 ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் கைது என தகவல் வெளியாகியுள்ளது. குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் இன்று 4 ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளை…