தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது குறித்து முதல்வர்களிடம் ஆலோசித்த பின் முடிவு எடுக்கப்படும் என தமிழக கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. நாள் ஒன்றுக்கு 6,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதன்காரணமாக, சில தளர்வுகளுடன் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன்காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் கடந்த மூன்று மாதங்களாக மூடப்பட்டுள்ளது. மேலும், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்தாமல், மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என தமிழக முதல்வர் பழனிச்சாமி அறிவித்தார்.
இந்தநிலையில் ஈரோடு மாவட்டம், நம்பியூரில் 2 கோடி மதிப்பிலான திட்டப்பணிகளை தமிழக கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையயன் திறந்து வைத்தார். அங்கு செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது குறித்து 18 நபர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டது எனவும், அவர்கள் பள்ளி திறப்பது, வழிகாட்டுதல் தொடர்பாக அறிக்கையை தயார் செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், முதல்வர்களிடம் ஆலோசித்த பின் முடிவு எடுக்கப்படும் எனவும், 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் பட்டியல், அடுத்த மாத இறுதிக்குள் வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
சென்னை: ஒரு புதிய ஆய்வில், X குரோமோசோம் மரபணு விந்தணுக்களின் வளர்ச்சிக்கும் ஆண்களின் கருவுறுதலுக்கும் அவசியம் என்று கண்டறியப்பட்டுள்ளது. ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட CSIR-Centre for Cellular…
சென்னை : ஐபிஎல் தொடரில் பிளே ஆஃப் சுற்றுக்கு இது வரை 3 அணிகள் தேர்வாகியுள்ள நிலையில் 4-வது அணிக்காக பெங்களூரு அணியும், சென்னை அணியும் நாளைய நாளில்…
சென்னை: பாஜகவுக்கு 272 எனும் பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றால் அக்கட்சியின் பிளான் பி என்ன என்ற கேள்விக்கு அமித்ஷா பதில் அளித்துள்ளார். நாட்டில் மொத்தமுள்ள 543 தொகுதிகளுக்கான…
சென்னை : இன்று நடைபெறும் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் மோதுகிறது. ஐபிஎல் 2024 இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், மே 17…
சென்னை: யூ-டியூபர் பெலிக்ஸிற்கு மே 31ஆம் தேதி வரையில் நீதிமன்ற காவல் விதித்தது கோவை நீதிமன்றம். பெண் போலீசார் பற்றி அவதூறாக பேசியாக யூ-டியூபர் சவுக்கு சங்கர்…
சென்னை : ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனான சஞ்சு சாம்சனுக்கு கொல்கத்தா அணியின் ஆலோசகரான கவுதம் கம்பிர் சில அட்வைஸ் கொடுத்துள்ளார். நடைபெற்று வரும்…