மெட்டாவுக்கு சொந்தமான வாட்ஸ்அப், அதன் செயலியில் அவ்வப்போது பல புதிய அம்சங்களை வெளியிட்டு பயனர்களை குதூகலப்படுத்தி வருகிறது. சமீபத்தில் ஒரே வாட்ஸ்அப்பில் இரண்டு கணக்குகளை பயன்படுத்தும் அம்சம், புகைப்படம் மற்றும் வீடியோக்களை எச்டி குவாலிட்டியில் அனுப்பும் அம்சம், ஸ்கிரீன் ஷேரிங் மற்றும் சேனல் போன்றவற்றை அறிமுகம் செய்தது.
தற்போது இந்த அம்சங்களுடன் சேர்த்து செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மூலம் இயங்கக்கூடிய மெட்டா ஏஐ அசிஸ்டென்ட் (AI-powered chats) எனப்படும் சாட் பாட்டை கடந்த 17ம் தேதி அறிமுகம் செய்தது. மெட்டா ஏஐ எனப்படும் அதிநவீன ஏஐ தொழில்நுட்பத்தை, மெட்டாவின் பல தளங்களில் ஒருங்கிணைக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இந்த ஏஐ சாட் பாட்டை அனுகுவதற்கு சேட் பக்கத்தில் வண்ணமயமான மற்றும் பயனர்களின் கண்ணை கவரும் வகையில் ஒரு ஷார்ட்கட் ஆனது கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஷார்ட் கட், மெசேஜ் ஐகானுக்கு மேலே வட்ட வடிவில் கொடுக்கப்பட்டுள்ளது. இதனை கிளிக் செய்தவுடன் பயனர்களுக்கு பல சிறப்பான அனுபவங்களை வழங்கும் ஏஐ சாட் பாட்டின் வரவேற்பு உரை தோன்றும்.
இதன்பிறகு அதில் உரையாடலை தொடங்கலாம். இந்த அம்சம் முன்னதாக ஐஓஎஸ் பீட்டா பயனர்களுக்குக் கிடைத்தது. இந்த அம்சத்தை அணுக ஐஓஎஸ் பயனர்கள் வாட்ஸ்அப் வெர்சன் 23.23.10 ஐ இன்ஸ்டால் செய்ய வேண்டும். அதேபோல ஆன்ட்ராய்டு பீட்டா பயனர்கள் கூகுள் பிளே ஸ்டோரில் 2.23.24.26 என்ற வெர்சனை இன்ஸ்டால் செய்ய வேண்டும்.
இப்போது இந்த சாட்டை மறைப்பதற்கான ஒரு அம்சத்தையும் வாட்ஸ்அப் வெளிட்டுள்ளது. இதனை அணுக உங்கள் வாட்ஸஅப்பின் செட்டிங்ஸை திறக்க வேண்டும். பிறகு அதில் சேட்ஸ் என்பதை கிளிக் செய்து உள்ளே சென்றால், ஃபாண்ட் சைஸ் என்பதற்கு கீழே ஷோ மெட்டா ஏஐ என்ற பட்டன் இருக்கும். இதை பயன்படுத்தி சேட் பக்கத்தில் தெரியும் ஏஐ சாட் பாட்டை ஆஃப் செய்ய முடியும்.
இந்த அம்சம் சில பீட்டா பயனர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது. மேலும் இது வரும் நாட்களில் மேலும் பலருக்குக் கிடைக்கும். வாட்ஸ்அப்பைத் தொடர்ந்து இந்த ஏஐ சாட் பாட் அம்சம் மெட்டாவின் இன்ஸ்டாகிராம் மற்றும் அதன் சமீபத்திய தயாரிப்பான ரே-பான் மெட்டா ஸ்மார்ட்கிளாஸ் உட்பட அனைத்து தளங்களிலும் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை : தமிழகத்தில் 4 மணி வரை 22 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தகவலை தெரிவித்துள்ளது. தமிழகத்தில், இந்த கோடை காலத்திலும்…
சென்னை : இந்திய அணியின் முன்னாள் வீரரான சுரேஷ் ரெய்னா, டி20 உலகக்கோப்பைக்கு தகுதி பெற்ற இந்திய அணியை பற்றி பேசியதுடன், ஹர்திக் பாண்டியாவிற்கு ஆதரவாகவும் பேசி இருக்கிறார்.…
சென்னை: அதிமுகவிற்குள் பிளவு எதுவும் இல்லை என முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பதில் அளித்துள்ளார். அதிமுகவிற்குள் பிளவு, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உடன் கருத்து வேறுபாடு…
சென்னை: வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதால் மீனவர்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நாளை மறுநாள் (22 ஆம்…
சென்னை : நடிகர் கவனுக்கு கால் செய்து மாஸ்க் படத்தை நடிக்க ஆண்ட்ரியா கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகர் கவின் ஸ்டார் படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக…
சென்னை: ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கும் 31 படத்தின் ஷூட்டிங் ஆகஸ்ட் மாதம் துவங்கும் என அறிவிப்பு. தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆர் தனது 41வது பிறந்தநாளை இன்று…