தேசிய பேரிடர் மேலாண்மை குழுவின் அறிக்கை மீது தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கை என்ன? என்று எம்.பி.ரவிக்குமார் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் கேள்வியெழுப்பியுள்ளார்.
வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக நிவர் எனும் புயல் தற்போது உருவாகியுள்ளது. இதன் காரணமாக கடலோர பகுதியில் உள்ள பல்வேறு மாவட்டங்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு தொடர்ந்து புயல் கூண்டுகள் ஏற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில் இது குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் எம்பி ரவிக்குமார் அவர்கள், தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் இனி வரக்கூடிய காலங்களில் புயல் வரும்பொழுது முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக அறிக்கை ஒன்றை பேரிடர் மேலாண்மை அமைப்பின் சார்பில் தமிழக அரசிடம் வழங்கப்பட்டது .
ஆனால் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள எதையுமே தமிழக அரசு இதுவரை செய்ததாக தெரியவில்லை. கஜா புயல் ஏற்படுத்திய பேரழிவுக்குப் பிறகு அதைப் பற்றி ஆய்வு செய்ய தேசிய பேரிடர் மேலாண்மை அமைப்பின் சார்பில் குழு ஒன்று அமைக்கப்பட்டு இருந்தது. தேசிய பேரிடர் மேலாண்மை அமைப்பு அளித்த அறிக்கை மீது தமிழக அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கை என்ன? எனவும் இனிமேலாவது தமிழக அரசு அந்த அறிக்கையை செயல்படுத்துமா எனவும் ரவிக்குமார் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இதோ அந்த பதிவு,
EPass : ஊட்டி, கொடைக்கானல் சுற்றுலாவாசிகளுக்கு பிரத்யேக இ பாஸ் வழங்க இன்று வழிகாட்டு நெறிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. கோடைகாலம் ஆரம்பித்து வெயில் மக்களை வாட்டி வதைத்து…
Virudhunagar : வெடிமருந்து வேன்களை அருகருகே வைத்து, வெடிமருந்துகளை இறக்கியதே விபத்துக்குக் காரணம் என தெரிய வந்துள்ளது. விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே ஆவியூர் கல்குவாரியில் நடந்த வெடிவிபத்தில் 3…
Rahul Gandhi : காங்கிரஸ் தேர்தல் அறிக்கையால் தோல்வியின் விளிம்பில் இருக்கிறார் பிரதமர் மோடி என ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார். மக்களவை தேர்தல் இரண்டு கட்டங்கள்…
Hardik Pandya : ஹர்திக் பாண்டியா உலகக்கோப்பை போட்டியில் விராட் கோலி மற்றும் சூர்யக்குமார் யாதவை விட தாக்கத்தை ஏற்படுத்தும் வீரராக திகழ்வார் என முகமது கைஃப் …
Mayank Yadav : லக்னோ அணியின் வேக பந்து வீச்சாளரன மயங்க் யாதவ் ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேற உள்ளதாக தகவல்கள் வந்துள்ளது. ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்…
RIP Praveenkumar: கோலிவுட் இளம் இசையமைப்பாளர் பிரவீன்குமார் உடல்நலக்குறைவால் காலமானார். தமிழ் சினிமாவின் இளம் இசையமைப்பாளரான பிரவீன்குமார்உடல் நலக்குறைவால் இன்று சென்னையில் காலாமானார். அவர் 28 வயதிலேயே…