கடந்த 70 ஆண்டுகளில் நடக்காதது, கடந்த ஒன்பது ஆண்டுகளில் செய்யப்பட்டுள்ளது.! மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர்

பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் நடந்த ரோஸ்கர் மேளாவில் மத்திய இந்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் உரையாற்றினார்.

அதில் பேசிய அவர், “பொருளாதார வளர்ச்சி என்பது சிறந்த வசதிகள் மற்றும் எளிதாக வாழ்வதைக் குறிக்கிறது.” என்று கூறினார்.

மேலும், “ஏழைகளின் நலன் பற்றி நான் பேசும்போது, கடந்த 70 ஆண்டுகளில் நடக்காதது, கடந்த ஒன்பது ஆண்டுகளில் செய்யப்பட்டுள்ளது” என்று மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் கூறியுள்ளார்.