“நேரம் வந்துவிட்டது” – ஓய்வை அறிவித்த பிரபல கிரிக்கெட் வீரர் பிராவோ!

டி20 உலகக் கோப்பையுடன் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக வெஸ்ட் இண்டீஸ் அணியின் பிரபல வீரர் டுவைன் பிராவோ அறிவித்துள்ளார்.

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டரான டுவைன் பிராவோ,இந்த வாரம் நடைபெறவுள்ள ஆஸ்திரேலியாவுக்கு எதிரான வெஸ்ட் இண்டீஸ் அணியில் தனது கடைசி டி20 உலகக் கோப்பை ஆட்டத்தை விளையாடிய பிறகு சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்தார்.அவருக்கு 38 வயது.

பிராவோ,கடந்த 2015 ஆம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்ற பிறகு,ஒருநாள் மற்றும் டி-20 போட்டிகளில் விளையாடி வந்தார்.

இதற்கிடையில்,டி-20 உலகக் கோப்பை தொடரில்,நேற்று இலங்கையுடன் நடந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி தோல்வியடைந்து அரையிறுதிப் போட்டியிலிருந்து வெளியேறியது.இந்த நிலையில்,ஆஸ்திரேலிய அணியுடன் நாளை நடக்கும் போட்டியுடன் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக பிராவோ அறிவித்துள்ளார்.

மேலும்,இதுதொடர்பாகபிராவோ கூறியதாவது:”ஓய்வு பெறுவதற்கான நேரம் வந்துவிட்டது என்று நான் நினைக்கிறேன்.இதுவரை வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக விளையாடியுள்ளது பெருமையாக இருக்கிறது.எனினும்,அதில்  நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்.இந்த டி-20 உலகக் கோப்பை தொடர், நாங்கள் எதிர்பார்த்தது அல்ல. இது கடினமான போட்டி. இருந்தாலும் தலை நிமிர்ந்து நிற்க வேண்டும்”, என்று தெரிவித்துள்ளார்.

எனினும்,ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங் அணியின் முக்கிய வீரரான பிராவோ, டி-20 போட்டிகளில் தொடர்ந்து ஆடுவாரா? என்பது குறித்து தெரிவிக்கவில்லை.

2004 முதல்,வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக பிராவோ,40 டெஸ்ட் போட்டிகள், 164 ஒரு நாள் சர்வதேசப் போட்டிகள் மற்றும் 90 டி20  போட்டிகளில் விளையாடியுள்ளார்.2012 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் டி20 உலகக் கோப்பையை வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணியில் பிராவோ ஒருவராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Recent Posts

IPL2024: ராஜஸ்தானை வீழ்த்தி ஹைதராபாத் திரில் வெற்றி..!

IPL2024:ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 200 ரன்கள் எடுத்தனர். இதனால் ஹைதராபாத் அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில்…

4 hours ago

ஆந்திராவில் 2,000 ஆயிரம் கோடி ரூபாயுடன் சிக்கிய 4 கண்டெய்னர்கள்.!

Andhra pradesh: ஆந்திராவில் ரூ.2,000 கோடி பணத்துடன் சென்ற 4 கண்டெய்னர்கள் பிடிபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திராவில் மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதால் பறக்கும்…

9 hours ago

என்னதான் ஆச்சு .. ?அறிவித்தவுடன் சொதப்பும் இந்திய வீரர்கள்… கவலையில் ரசிகர்கள் !

Indian Team : டி20 அணியை அறிவித்த பிறகு இந்திய அணியில் இடம்பெற்றுள்ள சில வீரர்கள் அடுத்தடுத்து ஐபிஎல் போட்டியில் சொதப்பி வருவதால், ரசிகர்கள் கவலையில் இருக்கின்றனர். வருகிற…

9 hours ago

கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் முயற்சி.? காங்கிரஸ் அமைச்சரின் சர்ச்சை கருத்து.!

Prajwal Revanna : கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் ரேவண்ணா முயற்சித்துள்ளார் என கர்நாடகா காங்கிரஸ் அமைச்சர் சர்ச்சையாக கருத்து தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி…

9 hours ago

உருவாகிறது பயோபிக்! அண்ணாமலையாக நடிக்கும் விஷால்?

Annamalai Biopic : தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் வாழ்கை வரலாற்று படம் எடுக்கப்படவுள்ளதாகவும் அதில் விஷால் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள்,…

9 hours ago

கொளுத்தும் வெயிலில்.. இந்த 6 மாவட்டத்திற்கு அடுத்த 3 மணி நேரத்தில் கோடை மழை.!

Weather Update : அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வெயில் வாட்டி…

10 hours ago