பிரதமர் மோடி தனது நடவடிக்கையால் கோவிட்-க்கு உதவி செய்துள்ளார். எனவே அதற்கு ‘மோவிட்’ பெயரிட்டுள்ளோம்.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி அவர்கள் பிரதமர் நரேந்திர மோடியை கொரோனா வைரசால் மக்கள் பாதிக்கப்படுவதற்கு அவர் தான் காரணம் என்று விமர்சித்து வருகிறார்.
இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், நாங்கள் கோவிட்-19-க்கு மோவிட் என பெயரிட்டுள்ளோம். ஏனெனில் மோடி நடவடிக்கை எடுத்திருந்தால் அது கோவிட்-ஆக மட்டுமே இருந்திருக்கும். ஆனால் பிரதமர் மோடி தனது நடவடிக்கையால் கோவிட்-க்கு உதவி செய்துள்ளார். எனவே அதற்கு ‘மோவிட்’ பெயரிட்டுள்ளோம். மேற்கு வங்கத்தில் கூட்டங்களை ஏற்பாடு செய்வதன் மூலம் பிரதமர் கொரோனா வைரஸ் பரவ வகுத்தார் என்று தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், பிரதமர் நரேந்திர மோடி அனைத்து பிரச்சனைகளுக்கும் காரணம். நான் கொரோனா தொற்றுநோய் குறித்து பலமுறை மத்திய அரசை எச்சரித்துள்ளோம். ஆனால் இதை மத்திய அரசு சற்றும் பொருட்படுத்தவில்லை. மேலும், 130 கோடி மக்களில், மூன்று சதவீதத்தினர் மட்டுமே இரண்டு டோஸ் தடுப்பூசியும் செலுத்திக் கொண்டுள்ளனர் எனக் குற்றம்சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Virudhunagar : விருதுநகர் மாவட்டம் ஆவியூர் வெடிவிபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு, குவாரி நிர்வாகம் சார்பில் தலா ரூ.12 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் காரியாப்பட்டி அருகே…
Google Down : கூகுள் தேடு பொறி, மற்றும் பிற கூகுள் சேவைகள் செயல்படவில்லை என சில பயனர்கள் புகார் அளித்து வருகின்றனர். நாம் உபயோகிக்கும் இணையத்தில்…
Chandrayaan-3 : நிலவில் தண்ணீர் இருக்கிறது என்பதை சந்திராயன்-3 தரவுகளை கொண்டு ஆராய்ச்சியாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். கடந்தாண்டு (2023) ஜூலை மாதம் நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய…
Stickers : வாகனங்களின் நம்பர் பிளேட்டில் ஸ்டிக்கர் ஒட்டினால் அபராதம் விதிக்கும் நடைமுறை இன்று முதல் அமலுக்கு வருகிறது. சமீபகாலமாக தனியார் வாகனங்களில் காவல்துறை, பத்திரிகையாளர், வழக்கறிஞர்,…
விருதுநகர் வெடிவிபத்து தொடர்பாக கல்குவாரியின் மற்றொரு உரிமையாளர் ராஜ்குமார் கைது செய்யப்பட்டார். விருதுநகர் அருகே ஆவியூரில் உரிமம் பெற்ற கல் குவாரியும், வெடி மருந்து குடோனும் செயல்பட்டு…
Election2024 : மத அடிப்படையில் இடஒதுக்கீட்டை மாற்ற மாட்டோம் என காங்கிரஸ் உத்தரவாதம் அளிக்குமா என பிரதமர் மோடி சவால் விடுத்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும்…