கவுதம் கம்பீருக்கு பதிலடி கொடுத்த விராட் கோலி…டிவிட்டரில் மோதி கொள்ளும் ரசிகர்கள்.!!

நேற்றைய ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் லக்னோவில் இருக்கும் ஏகனா ஸ்போர்ட்ஸ் சிட்டி மைதானத்தில் மோதியது. இப்போட்டியில் பெங்களூர் அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இதற்கிடையில், இப்போட்டியில் பெங்களூரு அணி சுலபமாக வெற்றி பெற்றாலும், களத்தில் விராட் கோலியின் கடும் ஆக்ரோஷம் நிறைந்து இருந்தது.

இதனால் லக்னோ, பெங்களூர் அணிகள் மோதிய ஆட்டம் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஏனென்றால், போட்டி முடிந்த பிறகு பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலியும்  லக்னோ அணி பயிற்சியாளர் கவுதம் கம்பீரூம் பயங்கரமான வாக்கு வாதத்தில் ஈடுபட்டார்கள்.

லக்னோ அணியின் இன்னிங்ஸின் போது  க்ருனால் பாண்டியாவின் கேட்சை விராட் கோலி பிடித்தார். கேட்சை பிடித்த பின் லக்னோ ரசிகர்களை பார்த்து விராட் கோலி கொடுத்த ரியாக்‌ஷன் இணையத்தில் வைராகி வருகிறது. கடந்த  ஏப்ரல் 10-ம் தேதி பெங்களூருவில் நடந்த ஆட்டத்தில், லக்னோ அணி பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மைதானத்திற்குள் வந்து பெங்களூர்  ரசிகர்களை பார்த்து, வாயில் விரலை வைத்து “சத்தம் வரக்கூடாது” என செய்கை காட்டி இருந்தார்.

அதனை தொடர்ந்து  தற்போது விராட் அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, நேற்றய போட்டியில் ஒரு ரியாக்‌ஷன்  கொடுத்தார். இது தொடர்பான வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், கவுதம் கம்பீருக்கு பதிலடி கொடுத்த விராட் கோலி என அவருடைய ரசிகர்கள் டிவிட்டரில்  பதிவிட்டு வருகிறார்கள். மேலும் கம்பீர் ரசிகர்கள் விராட் கோலி செய்தது தவறு என மாற்றி மாற்றி கருத்துக்களில் மோதி வருகிறார்கள்.

மற்றோரு பக்கம் மைதானத்தில் வாக்கு வாதத்தில் இருவரும் ஈடுபட்டதால் கிரிக்கெட் நெட்டிசன்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் பலரும் இது தவறான செயல் என பதிவிட்டு வருகிறார்கள்.

பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.

Recent Posts

வீடு.. எருமை.. தாலி.., விரக்தியின் விளிம்பில் மோடி.! ராகுல் காந்தி காட்டம்.!

Rahul Gandhi : காங்கிரஸ் தேர்தல் அறிக்கையால் தோல்வியின் விளிம்பில் இருக்கிறார் பிரதமர் மோடி என ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார். மக்களவை தேர்தல் இரண்டு கட்டங்கள்…

18 mins ago

கோலி, சூர்யாவை விட ஹர்திக் தான் தாக்கத்தை ஏற்படுத்துவார்! முன்னாள் கிரிக்கெட் வீரர் பேச்சு!

Hardik Pandya : ஹர்திக் பாண்டியா உலகக்கோப்பை போட்டியில் தாக்கத்தை ஏற்படுத்தும் வீரர் என முகமது கைஃப்  தெரிவித்துள்ளார். 2024-ஆம் ஆண்டுக்கான டி 20 உலகக்கோப்பை போட்டி…

19 mins ago

ஐபிஎல்லில் இருந்து வெளியேறும் மயங்க் யாதவ் ? இது தான் காரணம் !

Mayank Yadav : லக்னோ அணியின் வேக பந்து வீச்சாளரன மயங்க் யாதவ் ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேற உள்ளதாக தகவல்கள் வந்துள்ளது. ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்…

30 mins ago

28 வயதிலே இளம் இசையமைப்பாளர் மரணம்.! அதிர்ச்சியில் தமிழ் சினிமா…

RIP Praveenkumar: கோலிவுட் இளம் இசையமைப்பாளர் பிரவீன்குமார் உடல்நலக்குறைவால் காலமானார். தமிழ் சினிமாவின் இளம் இசையமைப்பாளரான பிரவீன்குமார்உடல் நலக்குறைவால் இன்று சென்னையில் காலாமானார். அவர் 28 வயதிலேயே…

42 mins ago

உடல் எடையை குறைக்க விபரீத பயிற்சி.! 6 வயது குழந்தை உயிரிழந்த சோகம்.!

America: அமெரிக்காவில் 6-வயது சிறுவன் உடல் பருமனாக இருந்ததால் டிரெட்மில்லில் ஓட வைத்து, சில நாட்கள் கழித்து உயிரிழந்த பரிதாப சம்பவம். அமெரிக்காவின் நியூ ஜெர்சி நகரத்தில்…

1 hour ago

கல்குவாரியில் வெடி விபத்து – குவாரி நிர்வாகம் ரூ.12 லட்சம் நிவாரணம்!

Virudhunagar : விருதுநகர் மாவட்டம் ஆவியூர் வெடிவிபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு, குவாரி நிர்வாகம் சார்பில் தலா ரூ.12 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் காரியாப்பட்டி அருகே…

1 hour ago