விராட், டிகே அதிரடியில் சொந்த மண்ணில் பஞ்சாபை வதம் செய்த பெங்களூரு ..!

RCBvsPBKS : ஐபிஎல் தொடரின் 6-வது போட்டியாக இன்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் பெங்களூரு அணியும், பஞ்சாப் அணியும் மோதியது. முதலில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்து வீச்சை தேர்வு செய்து விளையாடியது. இதனால், பஞ்சாப் அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது. பஞ்சாப் அணியின் கேப்டனான ஷிகர் தவானின் பொறுமையான ஆட்டத்திலும், அதன் பிறகு களமிறங்கிய ஜிதேஷ் சர்மா, சாம் கர்ரான் கூட்டணியாலும் அந்த அணி ஸ்கோரை சற்று உயர்த்தியது.

இதனால், 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால், 177 ரன்கள் எடுத்தால் தங்களது முதல் வெற்றியை பெறலாம் என களமிறங்கியது பெங்களூரு அணி. தொடக்க வீரர்களாக களமிறங்கிய விராட் கோலியும், டு பிளெசிஸ்ஸியும் அடித்து ஆட முடிவு செய்து விளையாடினார்கள். ஆனால் துரதிஷ்டவசமாக டு பிளெசி தொடக்கத்திலேயே 3 ரன்களுக்கு ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்.

அதன் பிறகு விராட் கோலி தனது ஆக்ரோஷமான விளையாட்டை விளையாட தொடங்கினார். பஞ்சாப் அணியின் பந்து வீச்சாளர்களை நன்கு பக்கங்களும் பவுண்டரிகளும் சிக்ஸர்களும் அடித்து அவரது ரசிகர்களுக்கு வானவேடிக்கை காட்டினார், மேலும், அவரது சிறப்பான ஆட்டத்தால் தனது T20 போட்டிகளில் 100வது அரை சதத்தையும் பூர்த்தி செய்தார்.  அவர் சரியாக 77 ரன்களில் இருந்த போது ஹர்ஷல் படேலின் அபாரமான பந்து வீச்சில் இக்கட்டான கட்டத்தில் ஆட்டமிழந்தார்.

இதனை தொடர்ந்து, களத்தில் தினேஷ் கார்த்திக்கும், இம்பாக்ட் வீரராக களமிறங்கிய லோம்ரோரும் ஆட்டத்தின் இறுதி கட்டத்தில் விளையாடி வந்தனர். இறுதி ஓவரில் 10 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், தினேஷ் கார்த்திக் முதல் பந்தை சிக்சருக்கு அடித்து அசத்தினார். அடுத்த பந்தை டிகே பவுண்டரி அடிக்க பெங்களூரு அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Recent Posts

55 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று.. மீனவர்களுக்கு எச்சரிக்கை.!

சென்னை: தமிழகத்தில் 55 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசும் என்பதால், மீனவர்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழக கடலோர பகுதிகளில் இன்று முதல்…

29 mins ago

நண்பேன்டா! சந்தானத்தை வைத்து கல்லா கட்ட ஆர்யா போட்ட பலே திட்டம்?

சென்னை : சந்தானத்தை வைத்து நடிகர் ஆர்யா இரண்டு படங்களை தயாரிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகர் சந்தானம் நடிப்பில் வெளியாகியுள்ள 'இங்க நான்தான் கிங்கு' படம்…

33 mins ago

‘இது தோனிக்கு கடைசி சீசனா இருக்கும்னு எனக்கு தோணல ..’ ! – ராபின் உத்தப்பா

சென்னை : ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரரான ராபின் உத்தப்பா எம்.எஸ்.தோனிக்கு இது கடைசி சீசனாக இருக்காது என கூறி இருக்கிறார்.…

50 mins ago

இனி வாட்ஸ்அப் மூலம் எளிதில் மின்கட்டணம் செலுத்தலாம்… ஆனால் ஒரு கண்டிஷன்.!

சென்னை: வாட்ஸ்அப் மூலம் எளிதில் மின்கட்டணம் செலுத்தும் வசதியை தமிழ்நாடு மின்சார வாரியம் அறிமுகம் செய்துள்ளது. தமிழ்நாடு மின் நுகர்வோர்கள் தாங்கள் பயன்படுத்த்தும் மின்சார அளவீட்டின்படியான கட்டணத்தை…

53 mins ago

அடுத்த 3 நேரத்தில் 32 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!

சென்னை: அடுத்த மூன்று மணி நேரத்திற்கு 32 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. தென்தமிழக கடலோரப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சிநிலவுகிறது.…

54 mins ago

குற்றாலத்தில் வெள்ளம்..அடித்து செல்லப்பட்ட சிறுவன்! அலறி ஓடிய மக்கள்!!

சென்னை : குற்றாலம் அருவி வெள்ளப்பெருக்கில் அடித்துச் செல்லப்பட்ட 17 வயது சிறுவன் மாயம். இந்த மாதம் தொடக்கத்தில் வெயில் வாட்டி வதைத்த நிலையில், கடத்த சில…

1 hour ago