கந்துவட்டிக்கு பணம் கொடுப்பது சட்டப்படி குற்றம் என்றாலும், ஆங்காங்கே அதன் கொடுமைகளை மக்கள் அனுபவித்து தான் வருகின்றனர்.
அப்படியான சம்பவங்கள் பூதாகரமாக வெளிவரும்போது தான் வெளியுலகிற்கு தெரியவருகிறது. அப்படித்தான் சேலம் மாவட்டம் டி.பெருமாபாளையம் எனும் ஊரில் இருந்த கந்துவட்டி கொடுமை வெளியில் தெரிய ஆரம்பித்துள்ளது.
டி.பெருமாபாளையம் ஊரை சேர்ந்த திருநாவுக்கரசு என்பவரும் அவரது குடும்பத்தாரும் கந்துவட்டிக்கு பணம் கொடுத்து வசூலில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது.
இந்த சம்பவம் குறித்து அதே ஊரை சேர்ந்த ரவீந்தரின் என்பவர் தட்டிக்கேட்டதால், திருநாவுக்கரசு குடும்பத்தார் தாக்கியதாக தெரிகிறது. இதனால் ரவீந்திரன் பலத்த காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறாராம்.
இந்த சம்பவத்தை அடுத்து தான் டி.பெருமாபாளையம் ஊரை சேர்ந்த பொதுமக்கள் கந்து வட்டிக்கு பணம் கொடுத்து வரும் திருநாவுக்கரசு மற்றும் அவர்களது குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரி, சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு கிராம மக்கள் சென்று விட்டனர்.
அங்கு கிராம மக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர் பின்னர் அவர்களை அதிகாரிகள் சமாதானப்படுத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறி அனுப்பிவைத்தனர்.
சென்னை : ஐபிஎல் தொடரின் இறுதி போட்டிக்கு தகுதி பெறும் முதல் அணிக்கான குவாலிபயர் 1 போட்டியானது இன்று நடைபெறுகிறது ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் நிறைவடைந்த…
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டனான தல தோனி தற்போது துபாய் ஐ 103.8 என்ற தனியார் யூடியூப் சேனலுக்கு பேட்டி ஒன்று…
சென்னை : இந்தியாவின் நட்சத்திர டென்னிஸ் வீரரான சுமித் நாகல் நடைபெற்று வரும் ஜெனிவா ஓபன் டென்னஸி தொடரின் முதல் சுற்றிலேயே தோல்வியடைந்து வெளியேறியுள்ளார். மண் தரையில்…
சென்னை: சூரி நடிப்பில் உருவாகியுள்ள 'கொட்டுக்காளி' படம் டிரான்சில்வேனியா சர்வதேச திரைப்பட விழாவில் போட்டியிட தேர்வாகியுள்ளது. ஜூன் 14-24 தேதிகளுக்கு இடையில் ருமேனியாவில் நடைபெறவிருக்கும் இந்த விழாவில்…
சென்னை: 4 ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் அகமதாபாத்தில் கைது செய்யப்பட்டது குறித்து குஜராத் டிஜிபி செய்தியாளர் சந்திப்பில் விளக்கம் அளித்தார். குஜராத் அகமதாபாத் விமான நிலையத்தில் 4 ஐஎஸ்ஐஎஸ்…
சென்னை : அமிர்தா ஐயர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. சினிமா துறையில் இருக்கும் நடிகைகள் பலரும் கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை…