வன்னியர்களுக்கான 10.5% இடஒதுக்கீட்டை அமல்படுத்த கோரி முதலமைச்சருக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கடிதம்.
வன்னியர் உள் ( 10.5%) ஒதுக்கீடு சட்டத்தை விரைந்து நிறைவேற்ற நடவடிக்கை கோரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார். அதில், தமிழ்நாட்டில் கல்வி, வேலைவாய்ப்பில் வன்னியருக்கு 10.5% உள் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை நியாயமானது.
தமிழ்நாட்டில் பிளஸ் 2 தேர்வு தேர்ச்சியில் கடைசி இடங்களை பிடித்த 15 மாவட்டங்களில் 12 வட தமிழ்நாட்டை சேர்ந்தவை. பள்ளி பொதுத்தேர்வுகளில் கடந்த 44 ஆண்டுகளாக வட மாவட்டங்கள் கடைசி இடங்களையே பிடிக்கின்றன என கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
வட மாவட்ட அரசு பள்ளிகளில் உட்கட்டமைப்பு வசதிகளும், போதிய ஆசிரியர்களும் இல்லை. வடமாவட்டங்களில் வறுமையில் வாடும் வன்னியர் சமுதாய மக்களால் தனியார் பள்ளிகளில் சேர முடியாது. எனவே, வன்னியர்களுக்கான 10.5% இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் பெங்களூரு அணியும், குஜராத் அணியும் மோதுகிறது. நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரில் இன்றைய 51-வது போட்டியில்…
IPL2024: மும்பை அணி 18.5 ஓவரில் அனைத்து விக்கெட்டைகள் இழந்து 145 ரன்கள் எடுத்தனர். இதனால் கொல்கத்தா அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில்…
Ricky Ponting : தற்போது நடைபெறுகிற டி20 கிரிக்கெட் போட்டிகளின் மாற்றங்களை குறித்து ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் பேட்டி ஒன்றில் பகிர்ந்து இருந்தார். ஆஸ்திரேலியா அணியின்…
Bloody Beggar Promo: நெல்சன், கவின் இணையும் படத்தின் ஜாலியான புரொமோ வீடியோவும், முதல் பார்வையும் இணையத்தை கலக்கிய வருகிறது. நடிகர் கவின் தற்போது ஸ்டார் படத்தில்…
ICC Ranking : ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணியை பின்னுக்கு தள்ளி ஆஸ்திரேலியா அணி நம்பர் 1 இடத்தில் முன்னேறி உள்ளது. ஐசிசி, தங்களது டெஸ்ட்…
Election Campaign : சோனியா காந்தி 20 முறை ராகுல் காந்தியை முன்னிறுத்தி தோல்வியடைந்துள்ளார் என அமித்ஷா விமர்சித்துள்ளார். இரண்டு கட்ட மக்களவை தேர்தல் நிறைவடைந்துள்ள நிலையில்,…