தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருத மொழிகளை இளைஞர்கள் படிக்க வள்ளலார் விரும்பினார்.! பிரதமர் உரை.!

இன்று வள்ளலாரின் 200வது பிறந்ததினம் கொண்டாடப்பட்டு வருகிறது. வள்ளலாரின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று சென்னை ராஜ்பவனில் (ஆளுநர் மாளிகை) வள்ளலாரின் சிலை திறக்கப்பட்டது. ஆளுநர் ஆர்.என்.ரவி வள்ளலாரின் சிலையை திறந்து வைத்தார். அப்போது பிரதமர் நரேந்திர மோடி இந்த விழாவை காணொளி வாயிலாக கண்டு உரையாற்றினார்.

அப்போது அவர் வள்ளலாரின் பெருமைகளை குறிப்பிட்டு பல்வேறு கருத்துக்களை மக்களிடம் தெரிவித்தார்.  அதில், தற்போதைய நவீன கல்விதித்திட்டத்திற்கு வள்ளலாரின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது. இளைஞர்கள் தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் புலமை பெற வள்ளலார் விரும்பினார். கடந்த 9 ஆண்டுகளில் கல்வி கட்டமைப்பு மாபெரும் வளர்ச்சி அடைந்துள்ளது.

3 தசாப்தங்களுக்கு பிறகு நமது நாடு தேசிய கல்வி கொள்கையை பெற்றுள்ளது. இளைஞர்கள் வட்டார மொழிகளில் மருத்துவம், பொறியியல் படிப்புகளை பயின்று வருகின்றனர்.  இதனால் அவர்களுக்கு பல்வேறு வாய்ப்புகள் உருவாகியுள்ளது.

வெள்ளாளர் காலத்திற்கு முன்னதாக சிந்தித்து செயல்பட்டவர். சமூக சீர்திருந்ததை வலியுறுத்தியவர். ஒவ்வொரு அணுவிலும் கடவுளை கண்டவர். சமத்துவ சமுதாயத்தை வலியுறுத்தும் வள்ளலாரின் கொள்கைகள் எனது மனஉறுதியை மேலும் வலுவடைய செய்கிறது. மகளிருக்கு இடஒதுக்கீடு சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டதற்கு வள்ளலார் உயிருடன் இருந்திருந்தால் கண்டிப்பாக வாழ்த்தியிருப்பார்.

வள்ளலாரின் கொள்கைகள் அனைவருக்கும் புரியும்படி எளிமையானதாக உள்ளது. அன்பு , இரக்கம், நீதி ஆகிய அவரது போதனைகளை நாம் பரப்புவோம். தரமான கல்வி , குழந்தைகளுக்கு வழங்குவோம், வள்ளலாரின் 200வது பிறந்தநாளில் அவருக்கு நான் மீண்டும் ஒருமுறை மரியாதை செலுத்துகிறேன் என பிரதமர் மோடி காணொளி வாயிலாக உரையாற்றினார்.

Tags: #PMModi

Recent Posts

IPL2024: மழையால் இன்றைய போட்டி ரத்தானது..!

இன்றைய ஐபிஎல் போட்டியில் ஹைதராபாத் அணியும், குஜராத் அணியும் ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் மோத இருந்தன. இந்த போட்டி தொடங்கியிருந்த போது மழை…

9 hours ago

காசுலாம் போச்சு .. ஆர்சிபி-சிஎஸ்கே போட்டியை பார்க்க டிக்கெட் புக் செய்த ரசிகர் ! கடைசியில் காத்திருந்த அதிர்ச்சி !!

சென்னை : ஐபிஎல்லில் நடக்கவிருக்கும் பெங்களூரு-சென்னை போட்டிகளுக்க்கான டிக்கெட் எடுக்கும் முயற்சியில் கிரிக்கெட் ரசிகர் ஒருவர் ரூ.67,000 வரை இழந்துள்ளார். ஐபிஎல் 2024 தொடருக்கான பிளே-ஆப் சுற்றுக்கான…

13 hours ago

3 நொடியில் 100 கி.மீ ஸ்பீடு.. அசுர வேகத்தில் களமிறங்கிய BMW M 1000 XR.!

சென்னை: பிஎம்டபிள்யு ரக புதிய மாடலான எம் 1000 XR மாடல் இந்தியாவில் 45 லட்ச ரூபாய்க்கு களமிறங்கியுள்ளது. பைக் பிரியர்களால் அதிக கவனம் ஈர்க்கும் அதிவேக…

13 hours ago

பிளாங்க் உடற்பயிற்சி செய்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க .!

Plank exersize-பிளாங்க்  உடற்பயிற்சி செய்வதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் யாரெல்லாம் செய்யக்கூடாது என்பதை பற்றி இப்பதிவில் காணலாம். உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள இன்றைய தலைமுறையினர் அதிகம்…

13 hours ago

மற்றவர்களை கவனிப்பது என்னோட வேலை இல்லை! விமர்சனங்கள் குறித்து இளையராஜா!

சென்னை : தன் மீது வைக்கப்படும் விமர்சனங்கள் குறித்து இளையராஜா விளக்கம் அளித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.  இசையமைப்பாளர் இளையராஜா தன்னுடைய பாடல்களை உரிமையை பெறாமல் எக்கோ மற்றும்…

13 hours ago

அத்துமீறிய இலங்கை மீனவர்கள்.. 14 பேரை கைது செய்த இந்திய கடற்படை.!

சென்னை: எல்லை தாண்டி வந்து, இந்திய கடல் எல்லைக்குள் மீன்பிடித்ததாக இலங்கை மீனவர்கள் 14 பேர் கைது. நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே எல்லை தாண்டி மீன்பிடித்ததாக…

13 hours ago