உத்தரப் பிரதேசத்தில் குரங்குகளின் தாக்குதலில் இருந்து தப்பிக்க வீட்டின் இரண்டாவது மாடியில் இருந்து குதித்த பாஜக தலைவரின் மனைவி உயிரிழந்தார்.
உத்தரப் பிரதேசத்தின் ஷாம்லி மாவட்ட பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் அனில் குமார் சவுகானின்,மனைவி குரங்குகளின் தாக்குதலில் இருந்து தப்பிக்க வீட்டின் இரண்டாவது மாடியில் இருந்து குதித்து செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.
50 வயதான சுஷ்மா தேவி, கைரானா நகரில் உள்ள அவரது வீட்டின் மொட்டை மாடிக்கு சென்றார்.அப்போது,அவரை ஒரு குரங்குக் கூட்டம் சுற்றி வளைத்ததாக கூறப்படுகிறது.இதனால்,குரங்குகள் தாக்குதலை தவிர்க்கும் பொருட்டு, சுஷ்மா மாடியிலிருந்து குதித்தார்.
கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்த அவரை அப்பகுதியினர் மருத்துவமனையில் சேர்த்தனர்.எனினும்,மருத்துவர்கள் வருவதற்குள் அவர் இறந்துவிட்டார்.
மேலும்,சம்பவம் நடந்தபோது அவரது கணவர் அனில் வீட்டில் இல்லை என்று கூறப்படுகிறது.உள்ளூர் பாஜக தலைவரான அனில் மறைந்த முன்னாள் எம்.பி. ஹுகும் சிங்கின் மருமகன் ஆவார்.
இதேபோல கடந்த திங்களன்று, இமாச்சலப் பிரதேசத்தின் மண்டி மாவட்டத்தில் 11 வயது சிறுவன், குரங்கிடமிருந்து தப்பிக்க முயன்றபோது கட்டிடத்திலிருந்து விழுந்து இறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை: சென்னையில் உள்ள நடிகர் சூர்யாவின் வீட்டிற்கு கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு மேலாக இலவசமாக போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது. நடிகர் சூர்யா கடந்த ஆண்டு சென்னையில்…
சென்னை : கொடைக்கானலில் 61-வது கோடை திருவிழாவானது மலர் கண்காட்சிகளுடன் கோலாகலமாக இன்று தொடங்கியுள்ளது. மலைகளின் இளவரசி என்று பெருமைக்குரிய இடம் தான் கொடைக்கானல், தமிழகத்தில் கோடை காலம்…
சென்னை : ஸ்டண்ட் காட்சி ஒன்றில் நடிகர் விஜய் பாம் பிளாஸ்ட்லிருந்து ஜஸ்ட் மிஸ்-ஸில் தப்பித்து இருக்கிறார். சினிமாவில் படங்களில் இருக்கும் ஸ்டண்ட் காட்சிகள் நாம் பார்ப்பதற்கு…
சென்னை: குலசையில் விண்வெளி பூங்கா அமைக்கப்பட உள்ளதற்கான அறிவிப்பை டிட்கோ வெளியிட்டுள்ளது. இந்தியாவின் ராக்கெட் ஏவுதளமாக செயல்படும் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவை அடுத்து இரண்டாவதாக தூத்துக்குடி மாவட்டம்…
சென்னை: கடந்த சில நாள்களாக ஆபரணத் தங்கத்தின் விலை உயர்ந்து கொண்டே சென்ற நிலையில், இன்று குறைந்துள்ளது. சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி காரணமாக…
சென்னை : தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 9 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை மையம் தகவலை தெரிவித்துள்ளது. கடந்த சில…