Categories: உலகம்

ரம்ஜானை முன்னிட்டு இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிறுத்தம்.. அமெரிக்க அதிபர் தகவல்.!

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7ஆம் தேதி ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலை தொடர்ந்து, ஹமாஸ் அமைப்பினர் அதிகம் இருக்கும் பாலஸ்தீன பகுதியான காசா நகர் மீது இஸ்ரேல் ராணுவம் தற்போது வரையில் தொடர்ந்து தாக்குதலைகளை நடத்தி வருகிறது.  இரு தரப்பு போரை நிறுத்த கோரி பல்வேறு நாட்டு தலைவர்கள் , உலகளாவிய அமைப்புகள் கோரிக்கை வைத்து வருகின்றனர். இருந்தும் இன்னும் காஸாவில் போர் சத்தம் ஓய்ந்தபாடில்லை.

இந்நிலையில் வரும் மார்ச் மாதம் 10ஆம் தேதி ரம்ஜான் பண்டிகை நோன்பு காலம் தொடங்கி, ஏப்ரல் 9ஆம் தேதி ரம்ஜான் பண்டிகை நிறைவடைகிறது. இஸ்லாமியர்களின் உயரிய பண்டிகையாக கருதப்படும் இந்த பண்டிகை தினத்தை முன்னிட்டு இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிறுத்தம் செய்ய உள்ளதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

Read More – மேற்கு ஆப்பிரிக்காவில் கத்தோலிக்க சர்ச்சில் துப்பாக்கி சூடு.! 15 பேர் உயிரிழப்பு.!

இதுகுறித்து ஜோ பைடன் நேற்று பதிவு செய்த வீடியோவில் , இரு தரப்பும் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு பணயக்கைதிகள் விடுவிக்க ஒப்புக்கொண்டுள்ளனர் என்றும், இந்த நடவடிக்கை அடுத்ததாக இரு தரப்புக்கும் இடையே போர் நிறுத்தம் செய்வதற்கான வாய்ப்பு உருவாக்கியுள்ளது. அடுத்த திங்கட்கிழமைக்குள் இரு தரப்புக்கும் இடையே நிரந்தர போர் நிறுத்தம் ஏற்படும் என நம்புவதாகவும் அந்த வீடியோவில் பைடன் கூறினார்.

மேலும்  இந்த போரின் காரணமாக பல அப்பாவி மக்கள் கொல்லப்படுகின்றனர். தற்காலிக போர்நிறுத்தம் மூலம் பாலஸ்தீனியர்கள் தங்கள் சொந்த நாட்டில் மீண்டும் நிம்மதியாக வாழ தொடங்க வாய்ப்பை ஏற்படுத்தி தரும் என்றும் கூறினார்.

Read More – அமெரிக்கா முதல் தாய்லாந்து வரை… இந்த நாடுகளில் கஞ்சா குற்றமில்லை… லிஸ்ட் இதோ…

ரம்ஜான் இடைக்கால போர் நிறுத்தம் மற்றும் பிணை கைதிகள் பரிமாற்றம் குறித்து தனியார் செய்தி நிறுவனம் வெளியிட்ட தகவலின்படி,  பெண்கள், 19 வயதுக்குட்பட்ட குழந்தைகள், 50 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் நோயாளிகள் உட்பட 40 இஸ்ரேலிய பிணைக் கைதிகளை ஹமாஸ் விடுவிக்கும் என்றும், அதே நேரத்தில் இஸ்ரேல் தரப்பில் இருந்து சுமார் 400 பாலஸ்தீனிய கைதிகளை விடுவிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது

மேலும் , காசாவில் உள்ள சேதமடைந்த மருத்துவமனைகள் மற்றும் உணவு விற்பனை நிலையங்கள் குறிப்பாக பேக்கரிகள்  ஆகியவற்றை பழுதுபார்ப்பதற்க ஒவ்வொரு நாளும் 500 டிரக்குகள் பாதிக்கப்பட்ட பகுதிக்குள் நுழைவதற்கு இஸ்ரேல் ராணுவம் அனுமதிக்கும் என்று தனியார் செய்தி நிறுவனம் ராய்ட்டர்ஸ் (Reuters) மூலம் தகவல்கள் கிடைத்துள்ளது.

 

 

Recent Posts

சிசிடிவியை பார்த்தால் உண்மை தெரியும்… ஸ்வாதி மாலிவால் பரபரப்பு.!

சென்னை: கெஜ்ரிவால் உதவியாளரால் தாக்கப்பட்டதாக கூறப்படும் ஸ்வாதி மாலிவால் இதுகுறித்து டிவீட் செய்துள்ளார். கடந்த மே 13ஆம் தேதி டெல்லியில் உள்ள ஆம் ஆத்மி கட்சி தலைவரும்,…

3 mins ago

55 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று.. மீனவர்களுக்கு எச்சரிக்கை.!

சென்னை: தமிழகத்தில் 55 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசும் என்பதால், மீனவர்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழக கடலோர பகுதிகளில் இன்று முதல்…

33 mins ago

நண்பேன்டா! சந்தானத்தை வைத்து கல்லா கட்ட ஆர்யா போட்ட பலே திட்டம்?

சென்னை : சந்தானத்தை வைத்து நடிகர் ஆர்யா இரண்டு படங்களை தயாரிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகர் சந்தானம் நடிப்பில் வெளியாகியுள்ள 'இங்க நான்தான் கிங்கு' படம்…

37 mins ago

‘இது தோனிக்கு கடைசி சீசனா இருக்கும்னு எனக்கு தோணல ..’ ! – ராபின் உத்தப்பா

சென்னை : ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரரான ராபின் உத்தப்பா எம்.எஸ்.தோனிக்கு இது கடைசி சீசனாக இருக்காது என கூறி இருக்கிறார்.…

54 mins ago

இனி வாட்ஸ்அப் மூலம் எளிதில் மின்கட்டணம் செலுத்தலாம்… ஆனால் ஒரு கண்டிஷன்.!

சென்னை: வாட்ஸ்அப் மூலம் எளிதில் மின்கட்டணம் செலுத்தும் வசதியை தமிழ்நாடு மின்சார வாரியம் அறிமுகம் செய்துள்ளது. தமிழ்நாடு மின் நுகர்வோர்கள் தாங்கள் பயன்படுத்த்தும் மின்சார அளவீட்டின்படியான கட்டணத்தை…

57 mins ago

அடுத்த 3 நேரத்தில் 32 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!

சென்னை: அடுத்த மூன்று மணி நேரத்திற்கு 32 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. தென்தமிழக கடலோரப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சிநிலவுகிறது.…

58 mins ago