#IPL2021: அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி.. வீரர்களை தொடர்ந்து விலகும் “அம்பயர்கள்”

ஐபிஎல் தொடரில் இருந்து அம்பையர்களான இந்தியாவை சேர்ந்த நிதின் மேனன் மற்றும் ஆஸ்திரேலியாவை சேர்ந்த பால் ரெய்பல் விலகியுள்ளார்.

இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரிக்கும் நிலையில், கொரோனா பரவலுக்கும் மத்தியில் ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன்பாக வீரர்கள், ஊழியர்கள் சிலருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அவர்கள் குணமடைந்து மீண்டும் அணியுடன் இணைந்தனர்.

கொரோனா அச்சம் காரணமாக டெல்லி அணியின் சுழற்பந்துவீச்சாளர் அஸ்வின், ஆஸ்திரேலிய வீரர்கள் ஆன்ட்ரூ டை, ஆடம் சாம்பா, கேன் ரிச்சர்ட்சன், இங்கிலாந்து வீரர் லிவிங்ஸ்டோன் ஆகிய வீரர்கள் ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறினார்கள். வீரர்கள் பலரும் வெளியேறி வரும் நிலையில், அணி நிர்வாகம் திணறி வருகிறது. குறிப்பாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் 4 வெளிநாட்டு வீரர்கள் மட்டுமே இருக்கும் நிலையில், அந்த அணியில் ஒரு வீரர் விலகினாலும் அணிக்கு சிக்கல்.

வீரர்கள் வெளியேறி வரும் சூழலில், ஐபிஎல் தொடரில் இருந்து அம்பையர்களான இந்தியாவை சேர்ந்த நிதின் மேனன் மற்றும் ஆஸ்திரேலியாவை சேர்ந்த பால் ரெய்பல் விலகியுள்ளார். ஐசிசி எலைட் லிஸ்டில் இருக்கும் ஒரே இந்திய நடுவர் நிதின் மேனன் தான். மேலும், தவறு செய்யாத அம்பையர் என்று பெயரை நிதின் மேனன் பலமுறை பெற்றுள்ளார்.

இந்திய அம்பையரான நிதின் மேனனின் மனைவி மற்றும் தாயாருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக அவர் வெளியேறியுள்ளதாகவும், இந்தியாவில் இருந்து வரும் விமானங்களுக்கு தடை விதித்துள்ளதால் ஆஸ்திரேலியா அம்பையரான பால் ரெய்பல் ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறியுள்ளார்.

Recent Posts

ஐபிஎல் திருவிழாவின் இன்றைய போட்டி ..! மும்பையுடன் பலப்பரீட்சை நடத்தும் கொல்கத்தா !!

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக மும்பை அணியும், கொல்கத்தா அணியும் மோதுகிறது. நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரில் இன்றைய 50-வது போட்டியாக…

40 mins ago

அட்சய திருதியை 2024 ல் எப்போது? தங்கம் வாங்குவதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க.!

அட்சய திருதியை 2024-அட்சய திருதியையின் சிறப்புகள் மற்றும் இந்த ஆண்டுக்கான தேதி எப்போது என தெரிந்து கொள்வோம். அட்சய திருதியை 2024: இந்த ஆண்டு மே மாதம்…

2 hours ago

IPL2024: ராஜஸ்தானை வீழ்த்தி ஹைதராபாத் திரில் வெற்றி..!

IPL2024:ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 200 ரன்கள் எடுத்தனர். இதனால் ஹைதராபாத் அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில்…

8 hours ago

ஆந்திராவில் 2,000 ஆயிரம் கோடி ரூபாயுடன் சிக்கிய 4 கண்டெய்னர்கள்.!

Andhra pradesh: ஆந்திராவில் ரூ.2,000 கோடி பணத்துடன் சென்ற 4 கண்டெய்னர்கள் பிடிபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திராவில் மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதால் பறக்கும்…

14 hours ago

என்னதான் ஆச்சு .. ?அறிவித்தவுடன் சொதப்பும் இந்திய வீரர்கள்… கவலையில் ரசிகர்கள் !

Indian Team : டி20 அணியை அறிவித்த பிறகு இந்திய அணியில் இடம்பெற்றுள்ள சில வீரர்கள் அடுத்தடுத்து ஐபிஎல் போட்டியில் சொதப்பி வருவதால், ரசிகர்கள் கவலையில் இருக்கின்றனர். வருகிற…

14 hours ago

கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் முயற்சி.? காங்கிரஸ் அமைச்சரின் சர்ச்சை கருத்து.!

Prajwal Revanna : கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் ரேவண்ணா முயற்சித்துள்ளார் என கர்நாடகா காங்கிரஸ் அமைச்சர் சர்ச்சையாக கருத்து தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி…

14 hours ago