டெல்லி உயர்நீதிமன்றம் , ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ டிடிவி தினகரன் கோரும் கட்சியின் பெயர், சின்னத்தை ஒதுக்குமாறு, தேர்தல் ஆணையத்திற்கு,உத்தரவிட்டிருக்கிறது.
சென்னை ஆர்.கே.நகர் தொகுதி தேர்தல் வெற்றிக்குப் பின்னர், டெல்லி உயர்நீதிமன்றத்தில், டிடிவி தினகரன் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், தனது அணிக்கு, கட்சி பெயரையும், சுயேச்சையாக தான் போட்டியிட்ட குக்கர் சின்னத்தையும் ஒதுக்குமாறு கோரியிருந்தார். மேலும், அனைத்திந்திய அம்மா திராவிட முன்னேற்ற கழகம், அம்மா எம்ஜிஆர் முன்னேற்றக் கழகம், அல்லது எம்ஜிஆர் அம்மா முன்னேற்றக் கழகம் ஆகிய மூன்று பெயர்களில் ஒன்றை தங்கள் அணிக்கு ஒதுக்குமாறு தினகரன் கோரிக்கை விடுத்திருக்கிறார்.
உள்ளாட்சி தேர்தல் உள்ளிட்ட தேர்தல்களை எதிர்கொள்ளும் வகையில், சின்னத்தையும், கட்சிப் பெயரையும் ஒதுக்குமாறு, தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட டிடிவி தினகரன் மனு செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை நடைபெற்ற முடிந்த நிலையில், டெல்லி உயர்நீதிமன்றம் இன்று காலை 10.45 மணியளவில் தீர்ப்பு வழங்கியது. ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ டிடிவி தினகரன் கோரும் சின்னத்தையும், கட்சிப் பெயரையும், தலைமைத் தேர்தல் ஆணையம் ஒதுக்குமாறு உத்தரவிட்டது. டெல்லி உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பின் மூலம், டிடிவி தினகரன் கோரிய குக்கர் சின்னம் கிடைக்கும் என்றும், மேலும், நீதிமன்றத்தின் மூலம் முன்வைக்கப்பட்ட, மூன்று பெயர்களில் ஒன்று கிடைக்கவும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
IPL2024: சென்னை அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 191 ரன்கள் எடுத்தனர். இதனால் பெங்களூர் அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய…
சென்னை: ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக்கில் தம்பதி மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிசூடு நடத்தியுள்ளனர். ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் பகுதியில் ஓர் தம்பதி மீது பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியுள்ளனர்.…
சென்னை : ஐபிஎல் தொடரின் இறுதி போட்டியானது முடியும் முன்னரே டி20 உலகக்கோப்பை அணியில் இடம் பெற்றுள்ள இந்திய வீரர்கள் நியூயார்க் புறப்பட உள்ளனர். இந்த ஆண்டு ஜூன்…
சென்னை: கனமழை எதிரொலியை தொடர்ந்து சுற்றுலா பயணிகளுக்கு பேரிடர் மேலாண்மைத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கனமழை பெய்து வரும் நிலையில், ஒரு சில…
சென்னை: நாளை காலை பாஜக அலுவலகம் முன்பு அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் முற்றுகை போராட்டம் நடைபெற உள்ளது. டெல்லி மாநில முதல்வரும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான…
சென்னை : இன்று நடக்கும் ஐபிஎல் போட்டியில் மழை வரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால், ஒருவேளை மழை குறுக்கிட்டால் ஐபிஎல் போட்டிகளில் ஓவர்கள் எப்படி குறைக்கிறார்கள்…