அமெரிக்காவில் டிக்டாக் செயலி தொடர்ந்து செயல்பட அதிபர் டிரம்ப் அனுமதி!

அமெரிக்காவில் சீன செயலியான டிக்டாக் செயல்பட அனுமதியளிக்கும் புதிய ஒப்பந்ததிற்கு அந்நாட்டு அதிபர் டிரம்ப் ஆதரவளித்துள்ள நிலையில், அந்நாட்டில் டிக்டாக் செயலிக்கு அனுமதியளித்துள்ளார்.

இந்தியாவை தொடர்ந்து, அமெரிக்காவும் டிக் டாக் உட்பட சீன செயலிகளை தடை செய்வதற்காக ஆலோசனையை மேற்கொண்டு வருவதாக அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ, கடந்த சில தினங்களுக்கு முன்பு கூறினார்.

இந்நிலையில், டிக்டாக் செயலியை அமெரிக்காவில் தடை செய்ய நிறைவேற்றப்பட்ட ஆணையில் கையெழுத்திடுவதாக அதிபர் ட்ரம்ப் கடந்த மாதம் தெரிவித்துள்ளார். மேலும், டிக்டாக் செயலியை அமெரிக்க நிறுவனத்திற்கு இம்மாதம் 15 ஆம் தேதிக்குள் விற்காவிட்டால், அமெரிக்காவில் டிக்டாக் செயலிக்கு தடை விதிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

டிக்டாக் செயலியை மைக்ரோசாப்ட் நிறுவனம் வாங்க முன்வந்த நிலையில், டிக்டாக் தாய் நிறுவனமான பைட்டான்ஸ் நிறுவனம், அதனை மறுத்துள்ளது. மேலும், டிக்டாக்கை மற்றொரு அமெரிக்க நிறுவனமான ஆரக்கல் நிறுவனம், டிக்டாக் செயலியை வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியானது.

இந்நிலையில் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த அமெரிக்க அதிபர் டிரம்ப், டிக்டாக் செயல்பாட்டை நிர்வகிக்க ஆரக்கிள் மற்றும் வால்மார்ட் நிறுவனம் இணைந்து புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளதாக தெரிவித்த அவர், அதற்கு ஆதரவளிப்பதாகவும் தெரிவித்தார். மேலும், டிக்டாக் நிறுவனம், அமெரிக்க கட்டுப்பாட்டில் இயங்குமெனவும், பயனர்களின் தகவல் பாதுகாப்பாக இருக்குமெனவும் டிக்டாக் செயலி செயல்பட அனுமதியளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

Recent Posts

பிறந்தாளுக்கும் .. கிரிக்கெட்டுக்கும் ராசி இல்லா ரோஹித் சர்மா ..! கவலையில் ரசிகர்கள் !

Rohit Sharma : பிறந்தநாளக்கும் ரோஹித் ஷர்மாவுக்கும் ராசி இல்லை என அவரது ரசிகர்கள் கவலையில் இருந்து வருகின்றனர். இந்திய அணியின் கேப்டனும், மும்பை அணியின் முன்னாள்…

19 mins ago

அஜித்துக்கு ஷாலினி கொடுத்த பிறந்தநாள் கிஃப்ட்! என்ன தெரியுமா?

Ajith Kumar : இன்று அஜித்குமாரின் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு அவருடைய மனைவி ஷாலினி பெரிய கிஃப்ட் ஒன்றை கொடுத்துள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான…

20 mins ago

விருதுநகர் கல்குவாரியில் வெடி விபத்து.! 3 பேர் உடல் சிதறி பலி.!

Virudhunagar: விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கல்குவாரியில் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் காரியாப்பட்டி அருகே ஆவியூர் கல்குவாரியில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. தனியாருக்கு சொந்தமான…

28 mins ago

இன்று தன்னம்பிக்கை நாயகன் அஜித்குமாரின் பிறந்த நாள்! குவியும் வாழ்த்துக்கள்!

HBDAjithkumar : நடிகர் அஜித்குமார் இன்று தனது 53-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவருக்கு ரசிகர்கள் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். தமிழ் சினிமாவில் ஆரம்ப காலகட்டத்தில்…

1 hour ago

ஐபிஎல் தொடரின் மற்றொரு மிகப்பெரிய போட்டி !! சென்னை – பஞ்சாப் இன்று பலப்பரீட்சை !!

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக சென்னை அணியும், பஞ்சாப் அணியும் மோதுகிறது. நடந்து கொண்டிருக்கும் ஐபிஎல் தொடரில் இன்றைய 49-வது போட்டியாக சென்னை…

4 hours ago

ஸ்டோய்னிஸ் அதிரடியால் லக்னோ அணி அபார வெற்றி ! மும்பையின் ப்ளே ஆஃப் கனவு கேள்வி குறி !

IPL 2024 : இன்று நடைபெற்ற போட்டியில் லக்னோ அணி மும்பை அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐபிஎல் தொடரின் 48வது போட்டியாக இன்று லக்னோ…

11 hours ago