சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த திசாரா பெரேரா..!

இலங்கையின் ஆல்ரவுண்டர் திசாரா பெரேரா சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

32 வயதான பெரேரா இந்த ஆண்டு மார்ச் மாதம் இலங்கைக்காக தனது கடைசி சர்வதேச போட்டியில் விளையாடினார். 2009 ஆம் ஆண்டில் தனது சர்வதேச வாழ்க்கையைத் தொடங்கிய பெரேரா, இலங்கைக்காக 6 டெஸ்ட், 166 ஒருநாள் மற்றும் 84 டி20 சர்வதேச போட்டிகளில் விளையாடினார்.

இதில் டெஸ்ட் போட்டிகளில் 11, ஒருநாள் போட்டிகளில் 175, டி 20 போட்டிகளில் 51 விக்கெட்  வீழ்த்தியுள்ளார். இது தவிர, அவர் பேட்டிங்கில் டெஸ்ட் போட்டிகளில் 203 ரன்களும், ஒருநாள் போட்டிகளில் 2338 ரன்களும் மற்றும் டி 20 போட்டிகளில் 1204 ரன்களும் எடுத்துள்ளார்.

இவர் சர்வதேச போட்டிகளில் ஒரே ஒரு சதம் அடித்துள்ளார். 2019 இல் நியூசிலாந்துக்கு எதிராக 140 ரன்கள் எடுத்தார். இலங்கை அணி  இங்கிலாந்து மற்றும் பங்களாதேஷுக்கு எதிராக ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது. இந்த தொடரில், இளம் வீரர்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுப்பார்கள் என்று கூறப்பப்ட்டது.

அதன் பிறகு பெரேரா சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்தார். அவர் தனது முடிவை தேர்வாளர்களுக்கு தெரிவித்துள்ளார். சமீபத்தில் இலங்கையில் நடந்த லிஸ்ட் ஏ போட்டியில் இலங்கை ஆர்மி அணிக்காக ஆடிய திசாரா பெரேரா, ப்ளூமிங் கிரிக்கெட் கிளப்புக்கு எதிரான போட்டியில் தொடர்ச்சியாக 6 சிக்ஸர்களை விளாசினார்.

பெரேரா 2016 ஆம் ஆண்டிலேயே டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

murugan

Recent Posts

பாரம்பரியமிக்க பானக்கத்தின் ஆச்சரியமூட்டும் நன்மைகளை தெரிஞ்சுக்கோங்க.!

பானக்கம் -பானகத்தின் ஆரோக்கிய நன்மைகள் மற்றும் செய்முறை பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம். பானக்கத்தின் நன்மைகள்: பொதுவாக பங்குனி சித்திரை மாதங்களில் தான்  நம் ஊர்களில் திருவிழாக்கள்,…

12 mins ago

‘ஹாய் காய்ஸ் நான் உங்கள் தோனி’ .. தோனி பெயரில் மோசடி செய்ய முயற்சி!

Online Scam : சமூகத்தளத்தில் தோனியின் பெயரை பயன்படுத்தி ரூ.600 வரை மோசடி செய்ய முயற்சி. இன்றைய நாட்களில் வாட்ஸ்ஆப், இன்ஸ்டாகிராம், X  தளம் என்ற டிஜிட்டல் தளங்களில்…

37 mins ago

இந்த அடி பத்தாது கண்ணா! ரஜத் படிதாருக்கு அட்வைஸ் செய்த அஜய் ஜடேஜா!

Rajat Patidar : ஹைதராபாத் அணிக்கு எதிராக ரஜத் படிதார்  ஆட்டம் பற்றி அஜய் ஜடேஜா புகழ்ந்து பேசியுள்ளார். நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும்,…

42 mins ago

புதுச்சேரியில் ஜூன் 6 பள்ளிகள் திறப்பு…தமிழகத்தில் எப்போது.? குழப்பத்தில் மாணவர்கள்.!

Schools Reopen: புதுச்சேரி மாநிலத்தில் ஜுன் 6ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என  அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் வரும் 29-ம் தேதி முதல்,…

49 mins ago

தெலுங்கானாவில் 11,12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு.! 7 மாணவர்கள் தற்கொலை.!

Student Suicide : தெலுங்கானாவில் பள்ளி தேர்வில் தோல்வியடைந்ததால் இதுவரை 7 மாணவ மாணவிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். தெலுங்கானா பள்ளி கல்வி வாரியம் நடத்தும் 11 மற்றும்…

50 mins ago

ஒலிம்பிக் போட்டியிலிருந்து விலகிய ஸ்ரீசங்கர் !! நீளம் தாண்டும் பதக்கம் கேள்வி குறி?

Olympic 2024 : இந்தியாவை சேர்ந்த நீளம் தாண்டும் தடகள வீரரான ஸ்ரீசங்கர் ஒலிம்பிக் போட்டியிலிருந்து விலகி உள்ளார். இந்த ஆண்டில் நடைபெற இருக்கும் ஒலிம்பிக் போட்டியில் இந்திய…

1 hour ago