பொன்னியின் செல்வன் படத்தின் மூலம் மீண்டும் சூப்பரான ரீ-என்ட்ரி கொடுத்த நடிகை த்ரிஷாவுக்கு தொடர்ச்சியா பெரிய பெரிய படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில், கடைசியாக அவர் விஜய்க்கு ஜோடியாக லியோ திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மக்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த திரைப்படத்தில் நடித்து முடித்த பிறகு இவருக்கு விடாமுயற்சி, சிரஞ்சீவிக்கு ஜோடியாக ஒரு திரைப்படம், மற்றும் கமல்ஹாசன் நடிக்கும் தக்லைஃப் ஆகிய படங்களில் நடிக்க கமிட் ஆகி இருக்கிறார். இதில் விடாமுயற்சி படத்திற்கான படப்பிடிப்பில் தான் த்ரிஷா இருக்கிறார்.
சமீபத்தில் விடாமுயற்சி படத்திற்கான அஜர்பைஜான் நாட்டில் முதல் அட்டவணை நிறைவடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. அடுத்ததாக அடுத்தகட்ட படப்பிடிப்புக்காக படக்குழு இடத்தை தேடி வருகிறது. இந்நிலையில், விடாமுயற்சி படக்குழு த்ரிஷாவை மிகவும் டென்ஷன் ஆக்கியுள்ளதாம்.
ஏனென்றால், நடிகை திரிஷா விடாமுயற்சி படத்தின் கால்ஷீட் கொடுத்துவிட்டு வேறு படங்களில் நடிக்க முடியாமல் தவித்து வருகிறாராம். விடாமுயற்சி படக்குழுவும் த்ரிஷாவை விடமால் லொகேஷன் தேடுகிறோம் காத்திருங்கள் என்று கூறிவருகிறார்களாம்.
இதனால் த்ரிஷா தான் கமிட் ஆகி இருக்கும் மற்ற படங்களுக்கு நடிக்க செல்லவே முடியவில்லையாம். எப்படியாவது விடாமுயற்சி படத்தில் நடித்துமுடித்துவிட்டு சீக்கிரம் அடுத்தப்படத்திற்கு செல்லவேண்டும் என்று முடிவெடுத்து இருக்கிறாராம். மேலும், விடாமுயற்சி படத்தில் அர்ஜுன், ஆரவ், ரெஜினா உள்ளிட்ட பல பிரபலங்களும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
IPL2024: சென்னை அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 191 ரன்கள் எடுத்தனர். இதனால் பெங்களூர் அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய…
சென்னை: ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக்கில் தம்பதி மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிசூடு நடத்தியுள்ளனர். ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் பகுதியில் ஓர் தம்பதி மீது பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியுள்ளனர்.…
சென்னை : ஐபிஎல் தொடரின் இறுதி போட்டியானது முடியும் முன்னரே டி20 உலகக்கோப்பை அணியில் இடம் பெற்றுள்ள இந்திய வீரர்கள் நியூயார்க் புறப்பட உள்ளனர். இந்த ஆண்டு ஜூன்…
சென்னை: கனமழை எதிரொலியை தொடர்ந்து சுற்றுலா பயணிகளுக்கு பேரிடர் மேலாண்மைத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கனமழை பெய்து வரும் நிலையில், ஒரு சில…
சென்னை: நாளை காலை பாஜக அலுவலகம் முன்பு அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் முற்றுகை போராட்டம் நடைபெற உள்ளது. டெல்லி மாநில முதல்வரும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான…
சென்னை : இன்று நடக்கும் ஐபிஎல் போட்டியில் மழை வரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால், ஒருவேளை மழை குறுக்கிட்டால் ஐபிஎல் போட்டிகளில் ஓவர்கள் எப்படி குறைக்கிறார்கள்…