14 ஆண்டுகளுக்கு முன்பு தொலைந்த பணப்பையை தற்போது மும்பை நபர் திரும்ப பெற்றுள்ளார்.
கடந்த 2006ம் ஆண்டில் சத்ரபதி சிவாஜி மகாராஜ் டெர்மினஸ்-பன்வெல் என்ற உள்ளூர் ரயிலில் பயணம் செய்த மும்பை நபரான ஹேமந்த் படல்கர் ரூ. 900 அடங்கிய தனது பணப்பையை தொலைத்து விட்டார். உடனடியாக அரசு ரயில்வே போலீஸ் (ஜிஆர்பி) அதிகாரிக்கு புகார் செய்திருந்தார். இந்த நிலையில் தற்போது 14 ஆண்டுகள் கழித்து இழந்த தனது பணப்பையை பெற்று கொண்டார் ஹேமந்த்.
ஏப்ரல் மாதமே போலீசாரால் கண்டுபிடிக்கப்பட்ட பணப்பையை வாங்க ஹேமந்த்க்கு அழைப்பு விடுத்தனர். ஆனால் ஊரடங்கால் வாங்க செல்ல இயலவில்லையாம். தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் மும்பையில் பன்வெல்லில் வசிக்கும் ஹேமந்த் வாஷியில் உள்ள ஜிஆர்பி அலுவலகத்திற்கு சென்றுள்ளார்.
அங்கு அவருக்கு தொலைந்த பணத்தில் ரூ. 300 வழங்கப்பட்டுள்ளதாம். மீதமுள்ள 500 நோட்டு செல்லாத நோட்டு என்பதால் புதிய நோட்டாக மாற்றிய பின் வழங்கப்பட உள்ளதாம். மேலும் பணப்பையை திருடியவர்கள் கைது செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
அட்சய திருதியை 2024-அட்சய திருதியையின் சிறப்புகள் மற்றும் இந்த ஆண்டுக்கான தேதி எப்போது என தெரிந்து கொள்வோம். அட்சய திருதியை 2024: இந்த ஆண்டு மே மாதம்…
IPL2024:ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 200 ரன்கள் எடுத்தனர். இதனால் ஹைதராபாத் அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில்…
Andhra pradesh: ஆந்திராவில் ரூ.2,000 கோடி பணத்துடன் சென்ற 4 கண்டெய்னர்கள் பிடிபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திராவில் மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதால் பறக்கும்…
Indian Team : டி20 அணியை அறிவித்த பிறகு இந்திய அணியில் இடம்பெற்றுள்ள சில வீரர்கள் அடுத்தடுத்து ஐபிஎல் போட்டியில் சொதப்பி வருவதால், ரசிகர்கள் கவலையில் இருக்கின்றனர். வருகிற…
Prajwal Revanna : கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் ரேவண்ணா முயற்சித்துள்ளார் என கர்நாடகா காங்கிரஸ் அமைச்சர் சர்ச்சையாக கருத்து தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி…
Annamalai Biopic : தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் வாழ்கை வரலாற்று படம் எடுக்கப்படவுள்ளதாகவும் அதில் விஷால் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள்,…