இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியை கே.எல்.ராகுல் புகழ்ந்து பேசியுள்ளார்.
இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் கேப்டன் தோனி இந்தியாவிற்காக பல சாதனைகள் செய்துள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக கடந்த 2020-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15-ம் தேதி அறிவித்தார். அதனையடுத்து ஐபிஎல் போட்டிகளில் மட்டும் விளையாடி வருகிறார்.
இந்திய அணி தோனி தலைமையில், இருக்கும் போது டி20 உலகக்கோப்பை, ஒருநாள் தொடருக்கான உலகக்கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் டிராபி உள்ளிட்ட கோப்பைகளை இந்தியா வென்றுள்ளது. மேலும் ஐசிசி நடத்தும் இந்த மூன்று விதமான கிரிக்கெட் தொடர்களிலும் கோப்பையை வென்ற ஒரே கேப்டன் என்ற சாதனையும் தோனி வைத்துள்ளார்.
இந்நிலையில், தோனி குறித்து பல கிரிக்கெட் வீரர்கள் புகழ்ந்து கூறுவது உண்டு அந்த வகையில், இந்திய கிரிக்கெட் வீரர் கேஎல் ராகுல் “தோனி நம் நாட்டுக்காக பல முக்கியமான கோப்பைகளை கேப்டனாக இருந்து பெற்றுக் கொடுத்துள்ளார். இந்தியாவுக்காக நிறைய பெருமைகளை தேடி தந்துள்ளார். நான் இவற்றை எல்லாம் விட பெருமையாக நினைப்பது என்னவென்றால் சக வீரர்களை மரியாதையுடன் நடத்துவதுதான். அவரிடம் எனக்கு இந்த விஷயம் மிகவும் பிடிக்கும். அவர் சொன்னால் துப்பாக்கி குண்டுகளை எந்தவித யோசனையும் இன்றி தாங்கிக்கொள்வேன்.
கேப்டன் என்றால் முதலில் எங்கள் நினைவுக்கு வரும் பெயர் தோனி மட்டும்தான். ஏனென்றால் அவர் ஒரு சகாப்தம். தோனி கேப்டனாக இருக்கும் போது அவரின் கீழ் விளையாடிய வீரர்கள் இப்பொது விளையாடிக்கிறார்கள் அவர்களிடம் இருந்தது சில நல்ல விசியங்களை கற்று கொண்டு வருகிறேன்” என்று கூறியுள்ளார்.
IPL 2024 : இன்று நடைபெற்ற போட்டியில் லக்னோ அணி மும்பை அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐபிஎல் தொடரின் 48வது போட்டியாக இன்று லக்னோ…
BCCI : டி20 உலகக்கோப்பைக்கான பிசிசிஐ அறிவித்துள்ள இந்திய அணியை ரசிகர்கள் இணையத்தில் விமர்சித்து வருகின்றனர். ஐபிஎல் தொடர் நடைபெற்று வரும் நிலையில் தற்போது டி20 உலகக்கோப்பை…
Israel : தெற்கு காசாவில் இஸ்ரேல் தாக்குதல் தொடரும் என அந்நாட்டு பிரதமர் நெதன்யாகு திட்டவட்டமாக தெரிவித்தார். இஸ்ரேலுக்கு எதிரான ஹமாஸ் அமைப்பினரை முழுதும் அழிக்கும் வரையில்…
Gp Muthu : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகியது பற்றி ஜிபி முத்து பேசியுள்ளார். குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சி பெரிய…
T20 World Cup 2024: டி20 உலக கோப்பை தொடருக்காக ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்தது. ஐபிஎல் தொடர் முடிந்த உடனே டி20 உலகக்கோப்பை…
Bird Flu : இந்தியாவில் பரவும் பறவை காய்ச்சல் தொடர்பாக இந்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது. நமது நாட்டில் மட்டும்மல்லாது உலகில் ஒரு சில நாடுகளில்…