பாகிஸ்தான் விமான விபத்தின் கடைசி திக் திக் நிமிடங்கள்.. விமானியின் கடைசி ஆடியோ வெளியானது !

பாகிஸ்தானில் நேற்று நடந்த விமான விபத்தில் 99 பேர் உயிரிழந்த நிலையில், அந்த விபத்து தொடர்பான விமானி பேசிய கடைசி திக் திக் ஆடியோ ஒன்று வெளியானது.

பாகிஸ்தான், லாகூரிலிருந்து கராச்சியை நோக்கி பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான PK-8303 விமானம் புறப்பட்டது. அந்த விமானம், கராச்சி சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. சிறிது நேரத்தில் தரையிறங்க வேண்டிய அந்த விமானம், திடீரென விமான நிலையத்திற்கு அருகிலிருந்த குடியிருப்பு பகுதிக்குள் விழுந்தது.

இதுவரை 91 பயணிகள், 8 ஊழியர்கள் என மொத்தம் 99 பேர் அந்த கோர விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர். 2 பேர் அந்த விபத்தில் இருந்து காயங்களுடன் தப்பினர். அவரை அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். உலகையே உலுக்கிய இந்த விபத்து தொடர்பான ஒரு வீடியோ, அங்குள்ள வீடுகளில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவானது. அந்த வீடியோவில், பறந்து வந்து கொண்டிருந்த விமானம், குடியிருப்பு பகுதியில் உள்ள கட்டடங்களுக்கு இடையே விழுந்தது.

அந்த விமானம், ஓடுபாதைக்கு அருகில் வந்தபோது திடீரென என்ஜினில் ஏற்பட்ட பழுது காரணமாக விமானம் ஓடுபாதையில் தரையிறங்கமுடியாமல் அங்குள்ள குடியிருப்பு பகுதியில் விழுந்தது. இதனால் அங்குள்ள வீடுகள், வாகனங்கழும் தீயில் எரிந்தது. 

அதில் பயணித்த இரண்டு பேர் மட்டும் அதிர்ஷ்டவசமாக காயங்களுடன் உயிர்தப்பிய நிலையில், அதில் ஒருவர் கூறுகையில், திடீரென விமானம் கிலே விழுந்ததாகவும், குழந்தைகளின் அலறல் சத்தம் கேட்டதாகவும், அவரை சுற்றி தீ எரிந்து வருவதாகவும் கூறினார். 

அந்த விமானத்தில் இயக்கிய விமானிக்கும் விமானக் கட்டுப்பாட்டு அறையில் இருந்த ஊழியருக்கும் இடையிலான கடைசி உரையாடலின் அவர் “விமானத்தில் ஒரு என்ஜினை இழந்துள்ளோம்” என்று அவர் கூறுகிறார். அதற்க்கு கட்டுப்பாட்டு அறையில் இருந்த ஊழியர், உங்களுக்காக இரண்டு ஓடுபாதைகளில் ஏதேனும் தரையிறங்குமாறு அவரிடம் சொன்ன விமானக் கட்டுப்பாட்டு அறையில் இருந்த ஊழியர், நாங்கள் உங்களுக்கு உதவி செய்கிறோம். என கூறினார்.

மேலும் சிறிது நேரத்தில் விமானத்திற்கும், விமானக் கட்டுப்பாட்டு அறைக்கும் தொடர்பு துண்டிக்கப்பட்டது. அந்த சமயமே, விமானம் விபத்துக்குள்ளானது குறிப்பிடத்தக்கது.

Recent Posts

பேட்டி அளித்த ‘தல’ தோனி ..! மகிழ்ச்சியில் ரசிகர்கள் ..!! என்ன பேசினார் தெரியுமா ?

சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டனான தல தோனி தற்போது துபாய் ஐ 103.8 என்ற தனியார் யூடியூப் சேனலுக்கு பேட்டி ஒன்று…

9 hours ago

ஜெனிவா ஓபன் டென்னிஸ் : இந்தியாவின் சுமித் நாகல் போராடி தோல்வி ! முதல் சுற்றியிலேயே வெளியேறிய பரிதாபம் !!

சென்னை : இந்தியாவின் நட்சத்திர டென்னிஸ் வீரரான சுமித் நாகல் நடைபெற்று வரும் ஜெனிவா ஓபன் டென்னஸி தொடரின் முதல் சுற்றிலேயே தோல்வியடைந்து வெளியேறியுள்ளார். மண் தரையில்…

10 hours ago

சூரியின் ‘கொட்டுக்காளி’ திரைப்படத்திற்கு சர்வதேச அங்கீகாரம்.!

சென்னை: சூரி நடிப்பில் உருவாகியுள்ள 'கொட்டுக்காளி' படம் டிரான்சில்வேனியா சர்வதேச திரைப்பட விழாவில் போட்டியிட தேர்வாகியுள்ளது. ஜூன் 14-24 தேதிகளுக்கு இடையில் ருமேனியாவில் நடைபெறவிருக்கும் இந்த விழாவில்…

10 hours ago

தற்கொலைப்படை தாக்குதல்.? 4 தீவிரவாதிகள் பற்றிய பரபரப்பு தகவல்கள்.!

சென்னை: 4 ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் அகமதாபாத்தில் கைது செய்யப்பட்டது குறித்து குஜராத் டிஜிபி செய்தியாளர் சந்திப்பில் விளக்கம் அளித்தார். குஜராத் அகமதாபாத் விமான நிலையத்தில் 4 ஐஎஸ்ஐஎஸ்…

11 hours ago

சிகப்பு கலர் மேலாடை…கிக் ஏத்தும் அந்த பார்வை..அமிர்தாவின் அசத்தல் போட்டோஸ் இதோ..!!

சென்னை : அமிர்தா ஐயர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. சினிமா துறையில் இருக்கும் நடிகைகள் பலரும் கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை…

11 hours ago

5-ம் கட்ட மக்களவை தேர்தல் !! மாலை 5 மணி வரையில் 61.90% வாக்கு பதிவு !

சென்னை : நடைபெற்று வரும் 5-ம் கட்ட வாக்குப்பதிவில் தற்போது மாலை 5 மணி வரையில் 61.90% சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. 5-ம் கட்ட மக்களவை தேர்தல்…

11 hours ago