ஐந்தாவது நாளாக ஏற்றம் கண்ட இந்தியப் பங்குச்சந்தை..! சென்செக்ஸ் 63,157 புள்ளிகளாக வர்த்தகம்..!

பிஎஸ்இ (BSE) சென்செக்ஸ் 239.56 புள்ளிகள் உயர்ந்து 63,157 ஆகவும், என்எஸ்இ (NSE) நிஃப்டி 18,769 ஆகவும் வர்த்தகம் நடைபெற்று வருகிறது.

கடந்த 4 நாட்களாக ஏற்றத்துடன் வர்த்தகமாகிவந்த இந்திய பங்குச்சந்தை, வாரத்தின் 5வது நாளான இன்று ஏற்றத்துடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளது. இன்றைய வர்த்தக நாளில் 62,960 புள்ளிகள் எனத் தொடங்கிய மும்பை பங்குச்சந்தை பிஎஸ்இ (BSE) சென்செக்ஸ் 239.56 புள்ளிகள் அல்லது 0.38% என உயர்ந்து 63,157 புள்ளிகளாக வர்த்தகம் ஆகிறது.

மேலும், தேசிய பங்குச்சந்தை என்எஸ்இ (NSE) நிஃப்டி 81.60 புள்ளிகள் அல்லது 0.44% உயர்ந்து 18,769 புள்ளிகளாக வர்த்தகம் நடைபெற்று வருகிறது. முந்தைய வர்த்தக நாள் முடிவில் சென்செக்ஸ் 62,917 புள்ளிகளாகவும், நிஃப்டி 18,688 புள்ளிகளாகவும் வர்த்தகம் நிறைவடைந்தது.

பஜாஜ் ஃபின்சர்வ், ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, எச்டிஎஃப்சி வங்கி, ஐடிசி லிமிடெட், ஹவுசிங் டெவலப்மென்ட் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் உயர்வுடன் காணப்படுகின்றன. டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், விப்ரோ லிமிடெட், பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா, ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், பார்தி ஏர்டெல் லிமிடெட் உள்ளிட்ட நிறுவங்களின் பங்குகள் சரிவுடன் காணப்படுகின்றன.