சீன அதிபர் ஜின்பிங் இரண்டு நாள் பயணமாக நேற்று இந்தியா வந்தார். சீன அதிபர் ஜின்பிங் நேற்று மதியம் 1.30 மணி அளவில் தனி விமானத்தில் சென்னை வந்தார். அவருக்கு விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு தமிழகம் சார்பில் கொடுக்கப்பட்டது. பின்னர் அவர் காரில் கிண்டியில் உள்ள ஐ.டி.சி. கிரண்ட் சோழா நட்சத்திர ஓட்டலுக்கு சென்று உணவு அருந்தி ஓய்வெடுத்தார்.
அதன் பிறகு மாலை 4 மணிக்கு சாலை மார்க்கமாக மோடியை சந்திக்க சீன அதிபர் ஜின்பிங் மாமல்லபுரம் சென்றார். மாமல்லபுரத்தில் பிரதமர் மோடி தமிழக பாரம்பரிய உடைகளான வேஷ்டி , சட்டை மற்றும் துண்டு அணிந்து சீன அதிபரை வரவேற்றார்.
இதைத்தொடர்ந்து இருவரும் நடந்து கொண்டே மாமல்லபுரத்தில் உள்ள சிற்பங்களை பார்வையிட்டனர். மாமல்லபுரத்தில் உள்ள சிற்பங்களின் சிறப்புகளை பிரதமர் மோடி சீன அதிபர் ஜின்பிங்குக்கு விளக்கம் கொடுத்து வந்தார்.
இதனால் மாமல்லபுரத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. அப்போது திடீரென ஒரு நாய் புகுந்தது. இதை பார்த்த பாதுகாப்பு அதிகாரிகள் பலத்த பாதுகாப்பையும் மீறி எப்படி நாய் அங்கு வந்தது என அதிர்ச்சி அடைந்தனர்.
சிறிது நேர போராட்டத்திற்கு பின் நாய் விரட்டப்பட்டது. இந்த சம்பவத்தால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
Madurai Merchant Conference : மதுரை மாநாட்டில் வணிகர்கள் ஒன்று கூடவுள்ளதான் காரணமாக தமிழகம் முழுவதும் நாளை அனைத்து கடைகளும் மூடப்படவுள்ளது. நாளை வாரத்தின் கடைசி நாளான…
TN School : கோடை விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கோடை வெப்பம் நிலவும் நிலையில், சிறப்பு…
Hardik Pandya : மும்பை இந்தியன்ஸ் கதை முடிந்தது என்றும் ஹர்திக் பாண்டியா கேப்டன் சி பற்றியும் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான்…
Mamata Banerjee : ஆளுநருக்கு எதிராக பணிப்பெண் கொடுத்த பாலியல் புகார் வீடியோ பார்க்கும் போது என் இதயத்தில் ரத்தம் கொட்டியது. - மம்தா பேனர்ஜி. மேற்கு…
IPL 2024 : ஐபிஎல் தொடரில் காயத்தில் இருந்து வந்த தீபக் சஹரும், மயங்க் யாதவும் ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. நடைபெற்று வரும்…
Weather Update : தென் தமிழக மாவட்டங்களில் இன்றும், நாளையும் கடல் சீற்றம் காணப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காற்றின் போக்கு காரணமாக தென் தமிழக கடலோர…