விவாகரத்தான பெண்ணை ஏமாற்றியவர் மீது வழக்கு..!

விவாகரத்தான பெண்ணை திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றிய ஆனந்த் சர்மா மீது கோவை மத்திய அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு.

கோவை மாவட்டம் பீளமேட்டில் வசிக்கின்ற பெண் ஒருவர்  துபாயில் பணிபுரிந்து இந்தியா திரும்பியவர்.இவர்,கணவனை பிரிந்து மூன்று குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.அந்த பெண்ணுக்கு  தொழில் ஆர்வம் அதிகமாக இருந்ததால்,தொழில் ரீதியான விவரங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

அந்த காரணத்தை பயன்படுத்தி,சென்னையில் உள்ள பிரபல தனியார் நிறுவனம் ஒன்றில் உயர்அதிகாரியாக பணியாற்றிய ஆனந்த் சர்மா என்பவர் அவரை தொடர்பு கொண்டார்.

இதனையடுத்து,அந்த பெண் கணவரை பிரிந்து வாழ்வதை சாதகமாக்கி தானும் மனைவியை பிரிந்து வாழ்வதாக கூறி ஆனந்த் சர்மா,அவருடன் நெருக்கமாக பழகினார்.

பின்னர்,தொழில் ரீதியாக வெளியூர் சென்றபோது,அந்த பெண்ணை திருமணம் செய்துகொள்வதாக கூறி அவரிடம் ஆனந்த் சர்மா பாலியல் ரீதியாக எல்லை மீறியுள்ளார். அந்த பெண்ணும் ஆனந்த் சர்மாவின் வார்த்தையினை நம்பி ஏமாந்துள்ளார் .

இதனையடுத்து,ஆனந்த் சர்மாவின் மீது சந்தேகம் வர,அவரைப் பற்றிய விபரங்களை அந்த பெண் சேகரிக்க ஆரம்பித்தார்.அப்போதுதான்,தன்னைப் போன்று திருமணமாகி கணவரை பிரிந்து வாழும் பல பெண்களை ஆனந்த் சர்மா ஏமாற்றியது அவருக்கு தெரிய வந்தது.

இதனைத் தொடர்ந்து,ஆனந்த் சர்மா மீது கோவை அனைத்து மகளிர் ஆணையத்தில் அந்த பெண் புகார் அளித்துள்ளார். இதன்காரணமாக, போலீசார் விசாரணை நடத்த தேசிய மகளிர் ஆணையம் பரிந்துரை செய்தது.

இதனால்,ஆனந்த் சர்மா மீது கற்பழிப்பு, கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவின் கீழ் கோவை மத்திய அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

மேலும்,ஆனந்த் சர்மாவை கைது செய்து விசாரணை நடத்தும் முயற்சியில் மகளிர் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

Recent Posts

ஐபிஎல் திருவிழாவின் இன்றைய போட்டி ..! மும்பையுடன் பலப்பரீட்சை நடத்தும் கொல்கத்தா !!

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக மும்பை அணியும், கொல்கத்தா அணியும் மோதுகிறது. நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரில் இன்றைய 50-வது போட்டியாக…

2 hours ago

அட்சய திருதியை 2024 ல் எப்போது? தங்கம் வாங்குவதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க.!

அட்சய திருதியை 2024-அட்சய திருதியையின் சிறப்புகள் மற்றும் இந்த ஆண்டுக்கான தேதி எப்போது என தெரிந்து கொள்வோம். அட்சய திருதியை 2024: இந்த ஆண்டு மே மாதம்…

3 hours ago

IPL2024: ராஜஸ்தானை வீழ்த்தி ஹைதராபாத் திரில் வெற்றி..!

IPL2024:ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 200 ரன்கள் எடுத்தனர். இதனால் ஹைதராபாத் அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில்…

9 hours ago

ஆந்திராவில் 2,000 ஆயிரம் கோடி ரூபாயுடன் சிக்கிய 4 கண்டெய்னர்கள்.!

Andhra pradesh: ஆந்திராவில் ரூ.2,000 கோடி பணத்துடன் சென்ற 4 கண்டெய்னர்கள் பிடிபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திராவில் மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதால் பறக்கும்…

15 hours ago

என்னதான் ஆச்சு .. ?அறிவித்தவுடன் சொதப்பும் இந்திய வீரர்கள்… கவலையில் ரசிகர்கள் !

Indian Team : டி20 அணியை அறிவித்த பிறகு இந்திய அணியில் இடம்பெற்றுள்ள சில வீரர்கள் அடுத்தடுத்து ஐபிஎல் போட்டியில் சொதப்பி வருவதால், ரசிகர்கள் கவலையில் இருக்கின்றனர். வருகிற…

15 hours ago

கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் முயற்சி.? காங்கிரஸ் அமைச்சரின் சர்ச்சை கருத்து.!

Prajwal Revanna : கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் ரேவண்ணா முயற்சித்துள்ளார் என கர்நாடகா காங்கிரஸ் அமைச்சர் சர்ச்சையாக கருத்து தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி…

15 hours ago