அரசு வேலை.. பண மோசடி வழக்கு.! அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்ட 120 பேருக்கு சம்மன் அனுப்பிய காவல்துறை.! .

அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்த வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்ட 120 பேருக்கு குற்றப்பிரிவு போலிசார் சம்மன் அனுப்பியுள்ளனர். 

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சி காலத்தில் அதிமுக அமைச்சராக அப்போது பொறுப்பில் இருந்த செந்தில் பாலாஜி , போக்குவரத்து துறையில் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம் பணம் வாங்கி ஏமாற்றியதாக செந்தில் பாலாஜி உள்ளிட்ட பலர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டு இருந்தது.

இந்த புகார் தான் உச்சநீதிமன்றம் வரை சென்று 2 மாதத்திற்குள் இந்த புகார் தொடர்பான விசாரணையை முடிக்க வேண்டும் என சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினருக்கு உத்தரவிட்டு இருந்தது. இந்த உத்தரவை அடுத்து தான் அமலாக்கத்துறையினர் செந்தில் பாலாஜி வீட்டில் சோதனை செய்து அவரை கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். அதன்படி, அமைச்சர் செந்தில் பாலாஜி, புகார் கொடுத்தவர்கள் உள்ளிட்ட 120 பேருக்கு குற்றப்பிரிவு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். வரும் ஜூலை 6ஆம் தேதி சென்னை அலுவலகத்தில் குறிப்பிட்ட ஆவணங்களோடு நேரில் வந்து சந்திக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

போக்குவரத்துக்கு துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி 89 பேரிடம் 1 கோடியே 67 லட்சம் ரூபாயை ஏமாற்றியதாக அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்ட சிலர் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.

Recent Posts

IPL2024: மும்பையை வீழ்த்தி ஆறுதல் வெற்றியுடன் தொடரை நிறைவு செய்த லக்னோ..!

IPL2024: மும்பை அணி 20 ஓவரில் 6 விக்கெட்டைகள் இழந்து 196 ரன்கள் எடுத்தனர். இதனால் லக்னோ அணி18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில்…

5 hours ago

லாவோஸ், கம்போடியாவில் வேலை மோசடி… வெளியுறவு அமைச்சகம் எச்சரிக்கை..!

லாவோஸ், கம்போடியா ஆகிய நாட்டிற்கு செல்லும் இந்தியர்களுக்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வேலை தேடி லாவோஸ் மற்றும் கம்போடியாவுக்குச் செல்லும் இந்தியர்களுக்கு இந்திய வெளியுறவு…

8 hours ago

ஊழல்வாதி என நிரூபித்தால் என்னை தூக்கிலிடுங்கள்..! பிரதமர் மோடி ஆவேசம்.!

சென்னை : என்னை ஊழல்வாதி என நிரூபித்தால் தூகிலுடுங்கள் என்று ஆவேசமாக பிரதமர் மோடி அவர்கள் பேசி இருப்பது தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் நாடெங்கும்…

11 hours ago

டெல்லி மதுபான கொள்கை வழக்கு.! குற்றப்பத்திரிகையில் முதன் முதலாக அரவிந்த் கெஜ்ரிவால் பெயர்.!

சென்னை: டெல்லி மதுபான கொள்கை வழக்கிற்கான குற்றப்பத்திரிகையில் அரவிந்த் கெஜ்ரிவால், ஆம் ஆத்மி கட்சி பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன. கடந்த 2021 ஆம் ஆண்டு டெல்லியில் ஆளும் ஆம்…

11 hours ago

பைக் பஞ்சர் ஆச்சுன்னா அஜித் என்ன செய்வாரு தெரியுமா? என்னங்க இந்த விஷயத்தை நம்பவே முடியல!!

சென்னை : பைக் பஞ்சர் ஆனால், அஜித் பைக்கை அந்த இடத்திலே நிறுத்திவிட்டு சென்றுவிடுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகர் அஜித்குமார் பொதுவாகவே பைக் மீது அதிகம்…

11 hours ago

மின்சரம் தாக்கி செயலிழந்த சிறுவனின் இதயம்.. நொடி பொழுதில் உயிரை மீட்ட மருத்துவர்.! வைரல் வீடியோ..

சென்னை: மின்சாரம் தாக்கி சுயநினைவை இழந்த சிறுவனைCநொடி பொழுதில் காப்பாற்றிய பெண் மருத்துவர் வீடியோ வைரலாகி வருகிறது. ஆந்திர மாநிலத்திலுள்ள விஜயவாடா நகரத்தில் அய்யப்பா நகரில் மின்சாரம்…

11 hours ago