சென்னையில் புதிய நீதிமன்ற வளாகம் – 4ம் தேதி அடிக்கல் நாட்டுகிறார் முதலமைச்சர்!

சென்னையில் புதிய நீதிமன்ற வளாகத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 4ம் தேதி அடிக்கல் நாட்டுகிறார்.

சென்னையில் பன்னடுக்கு நீதிமன்ற வளாகம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நாளை மறுநாள் நடைபெறுகிறது. 4-ஆம் தேதி புதிய நீதிமன்ற வளாகம் கட்டுவதற்கான நிகழ்ச்சியில் முதலமைச்சர் பங்கேற்று அடிக்கல் நாட்டுகிறார். சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் ஏற்பட்ட இட நெருக்கடியால் புதிதாக நீதிமன்ற வளாகம் அமைக்க பிராட்வே பேருந்து நிலையம் பின்புறம் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. கட்டுப்பான பணி முடிந்ததும் உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள செசன்ஸ், சிட்டி சிவில் கோர்ட், குடும்ப நல நீதிமன்றம் அங்கு மாற்றப்படுகிறது.

Leave a Comment