முதலீடுகள் , வேலை வாய்ப்புகள் குறித்த விவரங்களை முதலமைச்சர் இன்று  அறிவிப்பார் – அமைச்சர் எம்.சி.சம்பத்

முதலீடுகள் , வேலை வாய்ப்புகள் குறித்த விவரங்களை முதலமைச்சர் பழனிசாமி இன்று  அறிவிப்பார் என்று தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் கூறுகையில், சென்னையிலிருந்து டோக்கியோவுக்கு விமான சேவை தொடங்கும் என்ற அறிவிப்பின் மூலம் முதலீடுகள் அதிகரிக்கும். முதலீட்டாளர் மாநாட்டில் போடப்படக்கூடிய புதிய ஒப்பந்தங்கள் மூலம் தமிழக இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உறுதி செய்யப்படும் 2-வது உலக முதலீட்டாளர்கள் மாநாடு முலம் தமிழகத்திற்கு வரும் தொழில் முதலீடுகள் , வேலை வாய்ப்புகள் குறித்த விவரங்களை முதலமைச்சர் பழனிசாமி இன்று அறிவிப்பார் என்று தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்துள்ளார்.

Leave a Comment