மாநில அரசுகளுக்கு தர வேண்டிய ஜிஎஸ்டி இழப்பீடு நிலுவைத் தொகையை வழங்க, மத்திய அரசு 1.10 லட்சம் கோடி கடன் வாங்க முடிவு செய்துள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சரக்கு மற்றும் சேவை வரி எனப்படும் ஜிஎஸ்டி கடந்த 2017ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போது இதனால் மாநிலங்களுக்கு ஏற்படும் இழப்பீட்டை 5 ஆண்டுகளுக்கு வழங்குவதாக மத்திய அரசு உறுதி அளித்தது. இதற்கிடையே, கொரோனா தொற்று பரவல் காரணமாக மத்திய, மாநில அரசுகளின் வருவாய் வெகுவாகக் குறைந்தது. இந்நிலையில், மத்திய அரசின் கணக்கீட்டுப்படி, நடப்பு நிதியாண்டில் மாநிலங்களுக்கு வருவாய் இழப்பு 2.35 லட்சம் கோடி. இதில் ஜிஎஸ்டியை அமல்படுத்தியதால் 97,000 கோடி மட்டுமே இழப்பு ஏற்பட்டுள்ளது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
இதற்கிடையில், மத்திய நிதி அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘மாநில அரசுகளுக்கு தர வேண்டிய ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை வழங்க, மத்திய அரசு 1.10 லட்சம் கோடி கடன் வாங்க முடிவு செய்துள்ளது. இந்த நிதியானது மாநிலங்களுக்கு, திருப்பி செலுத்த கூடிய முறையில், ஜிஎஸ்டி இழப்பீடு வரிக்கு பதிலாக கடனாக வழங்கப்பட உள்ளது. இதன் முதல் மற்றும் வட்டி தொகையானது இழப்பீட்டு தொகையில் இருந்து கழிக்கப்படும். மத்திய அரசின் நடப்பாண்டு பற்றாகுறையில் எந்த பாதிப்பும் ஏற்படாது. அதே போல, மாநிலங்கள், மத்திய அரசு இணைந்து வாங்கும் கடன் தொகையும் உயராது என அந்த அறிவிப்பில் கூறியுள்ளது.
IPL2024: பஞ்சாப் அணி 18.4 ஓவரில் 2 விக்கெட்டைகள் இருந்து 262 ரன்கள் எடுத்தனர். இதனால் பஞ்சாப் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர். இன்றைய போட்டியில்…
Devon Conway : நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் இந்த விதி நல்லது தான் என ஆதரித்துள்ளார் சிஎஸ்கே அணியின் வீரரான டேவான் கான்வே. ஐபிஎல் தொடரின்…
Priya Anand : நடிகை பிரியா ஆனந்த் படுகிளாமராக நடித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக…
Inga Naan Thaan Kingu : சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள இங்க நான் தான் கிங்கு படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. வடக்குப்பட்டி ராமசாமி படத்தின் வெற்றியை தொடர்ந்து…
Realme C65 5G : ரியல்மி நிறுவனம் தனது அடுத்த 5ஜி ஸ்மார்ட் போனான ரியல்மி சி65 5ஜி வெளியிட்டது. ரியல்மி நிறுவனம் இந்த ஆண்டில் அடுத்தடுத்து…
DeepFake : 75 சதவீத இந்தியர்கள் போலியான டீப்ஃபேக் வீடியோக்களை பார்த்துள்ளனர் என ஓர் ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது. தொழில்நுட்ப உலகில் அதிவேகமாக வளர்ந்து வரும் AI எனும்…