Categories: சினிமா

6YearsofMersal: 3 வேடத்தில் கலக்கிய தளபதி விஜய்! மெர்சல் திரைப்படத்தின் மொத்த வசூல் விவரம்…

நடிகர் விஜய் கேரியரில் முதல்முறையாக விஜய் 3 கதாபாத்திரங்களில் நடித்த மெர்சல் திரைப்படம் வெளியாகி இன்றுடன் 6 ஆண்டுகள் நிறைவடைகிறது.

ராஜா ராணி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான அட்லீ, அடுத்ததாக தளபதி விஜய்யை வைத்து தெறி படத்தை இயக்கினார். இதனை தொடர்ந்து, மீண்டும் அவருடன் இணைந்து மெர்சல் படத்தை இயக்கினார், தளபதி விஜய் மூன்று வேடங்களில் நடித்தார்.

இப்படத்தில் நித்யா மேனன், காஜல் அகர்வால், சமந்தா ரூத் பிரபு, எஸ்.ஜே. சூர்யா, வடிவேலு, சத்யராஜ், ஹரீஷ் பெராடி மற்றும் பலர் நடித்துள்ளனர். தேனாண்டாள் ஸ்டுடியோ தயாரித்த இந்த திரைப்படம் கடந்த 2017ம் ஆண்டு (அக்டோபர் 18 அன்று) இதே நாளில் வெளியாகி இன்றுடன் 6 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.

மருத்துவ துறையில் நடக்கும் ஊழலை காட்சிப்படுத்தி எடுக்கப்பட்ட மெர்சல் திரைப்படம் மிக்பெரிய வெற்றி பெற்றது. விஜய் 3 கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்த படத்தில், வில்லன் (எஸ்.ஜே. சூர்யா) அப்பாவை (விஜய்) கொண்றதுடன் இரட்டையர்களாக மகன்களையும் கொலை செய்ய முயற்சி செய்வதை சுற்றி கதை நகரும்.

விஜய் மற்றும் எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பு, ஏ.ஆர்.ரஹ்மானின் இசை, அட்லீயின் இயக்கம் என அனைத்தும் பாராட்டை பெற்றதன் மூலம் பாசிடிவ் விமர்சனங்களை வசூலை வாரி குவித்தது. அதன்படி, ரூ.120 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் ரூ.250 கோடிக்கு மேல் வசூலை குவித்து மாபெரும் சாதனை படைத்தது.

ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் போன்ற தரமான வெற்றி படங்களை கொடுத்த அட்லீ சமீபத்தில் ஷாருக்கானை வைத்து ஜவான் எனும் பிரம்மண்ட வெற்றி திரைப்படத்தை வழங்கி ரூ.1000 கோடி வசூல் செய்த தமிழ் சினிமா இயக்குனர் என்ற பெருமையை பெற்றுக்கொண்டார்.

HBD Atlee: கோடி அறிவி கொட்டுதே…குருவை மிஞ்சிய சிஷ்யன்! நிற்காமல் செல்லும் அட்லீயின் பரிமாணம்!

ராஜா ராணி பட வெற்றியின் மூலம் அடுத்த வாய்ப்பாக விஜய்யை வைத்து இயக்கம் வாய்ப்பு கிடைத்தது. அப்படி முதல் முறையாக இணைந்த அட்லீ -விஜய் கூட்டணியில் ரூ.75 கோடி பட்ஜெட்டில் உருவான தெறி படம் ரூ.150 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது.

இந்த வெற்றியை தொடர்ந்து, மீண்டும் அட்லீயுடன் கைகோர்த்து ‘மெர்சல்’ என்ற படத்தில் நடித்தார் விஜய். சுமார் ரூ.150 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம் 2017 ஆம் ஆண்டில் வெளியாகி உலகளவில் 250 கோடி ரூபாய் வசூலித்து தமிழ் சினிமாவில் அதிக வசூல் செய்த படமாக மாறியது.

Thalapathy Vijay : விஜய் கூட படம் பண்ணுவீங்களா? அட்லீ சொன்ன பதில்!

தொடர் வெற்றி காரணமாக, மீண்டும் மூன்றாவது முறையாக அட்லீயுடன் நடிக்க ஒப்புக்கொண்டு, சுமார் ரூ.180 கோடி பட்ஜெட்டில் உருவான பிகில் திரைப்படம் பாஸிட்டிவ் விமர்சனங்களைப் பெற்று ரூ.300 கோடி ரூபாய் வசூலித்தது.

மெர்சல் பாக்ஸ் ஆபிஸ்

தமிழ்நாட்டில் மட்டும் மெர்சல் திரைப்படம் ரூ.126 கோடி வசூல் செய்தது. மேலும், கேரளாவில் ரூ.19.20 கோடி கர்நாடகாவில் ரூ.15.75 கோடி, ஆந்திராவில் ரூ.11.10 கோடி மற்ற பகுதிகளில் ரூ.3.30 கோடி என வெளிநாடுகளில் ரூ.77.20 கோடி சேர்த்து உலகளவில் மொத்தமாக ரூ.253.45 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

Recent Posts

மீண்டும் ரூ.55,000- ஐ நெருங்கும் தங்கம் விலை.. இன்று மட்டும் சவரனுக்கு ரூ.640 உயர்வு.!

சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் ரூ.55 ஆயிரத்தை நெருங்கியதால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல்…

9 mins ago

நாங்கள் நல்ல கிரிக்கெட்டை விளையாடவில்லை ! ஒப்பு கொண்ட மும்பை கேப்டன் !

சென்னை : நேற்று நடைபெற்ற போட்டியில் மும்பை அணி தோல்வியடைந்த பிறகு மும்பை அணியின் கேப்டனான ஹர்திக் பாண்டியா தோல்வியடைந்ததற்கு இதுதான் காரணம் என கூறி பேசி இருந்தார்.…

44 mins ago

திருமணத்திற்காக ஷாப்பிங் சென்ற போது பயங்கர விபத்து.. 6 வயது சிறுவன் உள்பட 5 பலி.!

சென்னை: ஆந்திரவில் நெடுஞ்சாலையில் நிகழ்ந்த பயங்கர சாலை விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். ஆந்திர மாநிலம் அனந்தபூர் அருகே குத்தி என்ற இடத்தில் கட்டுப்பாட்டை இழந்த கார்,…

53 mins ago

ரூ.5 லஞ்சம் வாங்கிய கம்பியூட்டர் ஆபரேட்டர்.! கைது செய்த லஞ்ச ஒழிப்புத்துறை.!

சென்னை : குஜராத்தில் 5 ரூபாய் லஞ்சம் வாங்கிய கணினி  ஆபரேட்டரை லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடியாக கைது செய்துள்ளது. குஜராத் அகமதாபாத்தின் ஜாம்நகர் மாவட்டத்தில் மோர்கண்டா கிராம…

1 hour ago

கெஜ்ரிவால் வீட்டில் நடந்தது என்ன.? ஆம் ஆத்மி விளக்கமும்.. ஸ்வாதி மாலிவால் பதிலும்…

சென்னை: ஸ்வாதி மாலிவால் விவகாரம் பாஜகவின் சதி என ஆம் ஆத்மி விளக்கம் அளித்துள்ளது. கடந்த மே 13ஆம் தேதி டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டிற்கு…

1 hour ago

5ஆம் கட்டத் தேர்தல்: 49 தொகுதிகளில் பரப்புரை இன்றுடன் ஓய்கிறது.!

சென்னை: 5ஆம் கட்ட தேர்தல் நடைபெற உள்ள மாநிலங்களில் இன்று மாலை 5 மணியுடன் பரப்புரை நிறைவடைகிறது. 5 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் உட்பட 49…

2 hours ago