அகில உலக சந்தையில் அடுத்த அதிரடி… தனது மடிக்ககூடிய புதிய மாடலை களமிறக்கப்போகும் சாம்சங் நிறுவனம்…

சர்வதேச அளவில் சரித்திரம் படைத்துக்கொண்டிருக்கும் சாம்சங் நிறுவனம் தற்போது அதன் 5ஜி கேலக்ஸி எஸ் 20 இசட் ஃபிளிப் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. கிழக்காசிய நாடான தென் கொரிய நாட்டின்  நிறுவனமான சாம்சங் நிறுவனம், சமீபத்தில் சான் பிரான்சிஸ்கோவில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சி ஒன்றில்  தனது இரண்டாவது மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனை வெளியிட்டுள்ளது. இந்த ஸ்மார்ட் போன்  சர்வதேச சந்தையில் ஆப்பிள் உள்ளிட்ட போட்டி நிறுவனங்களை பின்னுக்கு தள்ளும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த கையடக்க ஸ்மார்ட் போன், அதிக திறன் கொண்ட நான்கு கேமராக்களையும், சதுரமாக மடிக்கக்கூடிய கண்ணாடி திரைகளையும் கொண்டது. இதன் விலை இந்திய மதிப்பில் 98 ஆயிரம் ரூபாயில் இருந்து தொடங்குகிறது. இந்த மாடல்,  வரும் வெள்ளிக்கிழமை முதல் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கேலக்ஸி எஸ் 20 செல்போன்கள் ஊதா, தங்கம் மற்றும் கருப்பு நிறங்களில் விற்பனைக்கு வரவுள்ளதாக சாம்சங் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். இதன் வருகை சர்வதேச சந்தையில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Kaliraj

Recent Posts

வெயிலில் மயங்கிய சிறுவர்கள்.. தோல்வியில் உலக சாதனை நடன நிகழ்ச்சி.. வருந்திய பிரபு தேவா.!

Prabhu Deva Performance: உச்சி வெயிலில் காத்து கிடந்தும் கடைசி நிமிடத்தில் வராத பிரபுதேவா வருத்தம் தெரிவித்து வீடியோ கால் செய்த வளம். சர்வதேச நடனத் தினத்தை…

19 mins ago

கில்லியை மிஞ்சியதா தீனா? ரீ-ரிலீஸில் செய்த வசூல் விவரம் இதோ!

Dheena Re Release : ரீ -ரிலீஸ் ஆன தீனா படம் இதற்கு முன்பு வெளியான கில்லி படத்தின் முதல் நாள் வசூலா முறியடித்துள்ளதா என்பதை பார்க்கலாம்.…

33 mins ago

‘ஏமாற்றம் தான் மிச்சம்’ – மனம் உடைந்த ரிங்கு சிங் குடும்பத்தினர்..!

Rinku Singh : நடைபெற இருக்கும் டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியில் பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட ரிங்கு சிங் முதன்மை அணியில் இடம்பெறாமல், ரிசர்வ் வீரராக தேர்வு…

33 mins ago

ஊட்டி, கொடைக்கானல் சுற்றுலாவாசிகளே… இன்று மாலை முக்கிய அப்டேட்.!

EPass : ஊட்டி, கொடைக்கானல் சுற்றுலாவாசிகளுக்கு பிரத்யேக இ பாஸ் வழங்க இன்று வழிகாட்டு நெறிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. கோடைகாலம் ஆரம்பித்து வெயில் மக்களை வாட்டி வதைத்து…

52 mins ago

விருதுநகர் வெடிவிபத்து – FIRஇல் வெளியான திடுக்கிடும் தகவல்கள்.!

Virudhunagar : வெடிமருந்து வேன்களை அருகருகே வைத்து, வெடிமருந்துகளை இறக்கியதே விபத்துக்குக் காரணம் என தெரிய வந்துள்ளது. விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே ஆவியூர் கல்குவாரியில் நடந்த வெடிவிபத்தில் 3…

1 hour ago

வீடு.. எருமை.. தாலி.., விரக்தியின் விளிம்பில் மோடி.! ராகுல் காந்தி காட்டம்.!

Rahul Gandhi : காங்கிரஸ் தேர்தல் அறிக்கையால் தோல்வியின் விளிம்பில் இருக்கிறார் பிரதமர் மோடி என ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார். மக்களவை தேர்தல் இரண்டு கட்டங்கள்…

2 hours ago