பந்த் என்பது போராட்ட வழிமுறைகளில் ஒன்று. மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதற்காகவும், ஆட்சியின் மீதான எதிர்ப்பை தெரிவிக்கவும் நடத்துவது தான் பந்த். – தமிழிசை சவுந்தரராஜன்.
கோவை கார் வெடிப்பு சம்பவத்தை அடுத்து, அதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், ஆளும் திமுக அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பாஜக சார்பில் வரும் 31ஆம் தேதி கோவை மாநகரில் பந்த் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து முன்னாள் பாஜக தமிழக தலைவரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சவுந்தராஜன் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘ பாஜக சொல்லி தான் மக்கள் பயப்படுவார்கள் என்பது வேடிக்கையாக இருக்கிது. மக்கள் செய்தித்தாள் படிக்கிறார்கள், டிவி பார்க்கிறார்கள் அதன் மூலமே இதனை தெரிந்து கொள்வார்கள். ‘ என தெரிவித்தார்.
மேலும் குறிப்பிடுகையில், ‘ பந்த் என்பது போராட்ட வழிமுறைகளில் ஒன்று. மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதற்காகவும், ஆட்சியின் மீதான எதிர்ப்பை தெரிவிக்கவும் நடத்துவது தான் பந்த். மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதுதான் அனைவருவது விருப்பம்.’ என தமிழிசை தெரிவித்தார்.
மேலும் செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘ கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்திருக்கின்றது. ஏன் இவ்வாறு நடந்தது என்பதை காவல்துறை முறையாக விசாரணை நடத்த வேண்டும்.’ என தமிழிசை சவுந்தராஜன் குறிப்பிட்டு பேசினார்.
சென்னை: ஒரு புதிய ஆய்வில், X குரோமோசோம் மரபணு விந்தணுக்களின் வளர்ச்சிக்கும் ஆண்களின் கருவுறுதலுக்கும் அவசியம் என்று கண்டறியப்பட்டுள்ளது. ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட CSIR-Centre for Cellular…
சென்னை : ஐபிஎல் தொடரில் பிளே ஆஃப் சுற்றுக்கு இது வரை 3 அணிகள் தேர்வாகியுள்ள நிலையில் 4-வது அணிக்காக பெங்களூரு அணியும், சென்னை அணியும் நாளைய நாளில்…
சென்னை: பாஜகவுக்கு 272 எனும் பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றால் அக்கட்சியின் பிளான் பி என்ன என்ற கேள்விக்கு அமித்ஷா பதில் அளித்துள்ளார். நாட்டில் மொத்தமுள்ள 543 தொகுதிகளுக்கான…
சென்னை : இன்று நடைபெறும் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் மோதுகிறது. ஐபிஎல் 2024 இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், மே 17…
சென்னை: யூ-டியூபர் பெலிக்ஸிற்கு மே 31ஆம் தேதி வரையில் நீதிமன்ற காவல் விதித்தது கோவை நீதிமன்றம். பெண் போலீசார் பற்றி அவதூறாக பேசியாக யூ-டியூபர் சவுக்கு சங்கர்…
சென்னை : ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனான சஞ்சு சாம்சனுக்கு கொல்கத்தா அணியின் ஆலோசகரான கவுதம் கம்பிர் சில அட்வைஸ் கொடுத்துள்ளார். நடைபெற்று வரும்…