தமிழறிஞர் அவ்வை நடராஜன் காலமானார்..! முதல்வர் நேரில் அஞ்சலி..!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னை அண்ணாநகர் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள தமிழறிஞர் அவ்வை நடராஜன் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி

தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரும் பிரபல தமிழறிஞருமான அவ்வை நடராஜன் அவர்கள் வயது மூப்பின் காரணமாக நேற்று சென்னையில் அவரது இல்லத்தில் காலமானார். இவரது மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னை அண்ணாநகர் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள தமிழறிஞர் அவ்வை நடராஜன் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.மேலும் அவரது குடும்பத்தினருக்கும் ஆறுதல் தெரிவித்தார்.

தமிழறிஞர் அவ்வை நடராஜனுக்கு, 2011 ஆம் ஆண்டு நாட்டின் நான்காவது உயரிய விருதான பத்மஸ்ரீ வழங்கி மத்திய அரசு கௌரவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment