முலாயம் சிங் யாதவின் மனைவி சாதனா குப்தா காலமானார்.!

சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர் முலாயம் சிங் யாதவின் மனைவி சாதனா குப்தா சனிக்கிழமை காலமானார். நுரையீரல் தொற்று காரணமாக குருகிராமில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சத்னா குப்தா பாஜக தலைவர் அபர்ணா யாதவின் மாமியார் மற்றும் பிரதீக் யாதவின் தாயார் ஆவார். கடந்த நான்கு நாட்களாக ஆபத்தான நிலையில் சிகிச்சை ஐசியூவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிர் பிரிந்தது.