இந்த வெற்றியை கொடுத்த ஈசனுக்கும், உங்களுக்கும் நன்றி – இயக்குனர் மோகன்

இயக்குனர் மோகன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் திரௌபதி. இப்படம் பல தடைகளை தாண்டி, ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும், நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் நாடக காதலை மையமாக கொண்டு உருவாகியுள்ளது. இந்நிலையில், இப்படம் இதுவரை 14.28 கோடி வரை வசூல் செய்துள்ள நிலையில், இப்படம் கொரோனா எதிரொலியால் திரையரங்குகளில் திரையிடப்படவில்லை. இதுகுறித்து இயக்குனர் மோகன் தனது ட்வீட்டர் பக்கத்தில், ‘இந்த வெற்றியை கொடுத்த ஈசனுக்கும், உங்களுக்கும் நன்றி’ என பதிவிட்டுள்ளார். 

அடுத்த பட பெயரும் கடவுள் பெயர் தான்!

திரௌபதி திரைப்படம், இயக்குனர்  மோகன் இயக்கத்தில் உருவாகியுள்ளது. இப்படம் பல எதிர்ப்புகளுக்கும், தடைகளுக்கும் மத்தியில் வெளியாகி, திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இப்படம் வெளியாகி ஒரே வாரத்தில், 10 கோடிக்கும் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.  இந்நிலையில், இப்படம் குறித்து இப்படத்தின் இயக்குனரான மோகன் அவர்கள் கூறுகையில், ‘திரௌபதி’ ன்னு கடவுள்பெயர் வைத்ததால் தான் இவ்வளவு வன்மம் என்று தெளிவா புரியுது. அடுத்த பட பெயரும் கடவுள் பெயர் தான். விரைவில் அறிவிப்பு வரும்.’ எனகூறியுள்ளார்.