நீர்நிலை ஆக்கிரமித்தால் அகற்றம் உறுதி…..கட்டிடங்கள் தப்ப முடியாது ……ஆட்சியர் எச்சரிக்கை…..!!!!

அனைத்து நீர்நிலைகளிலும் ஆக்கிரமிப்புகள் தொடர்ந்து அகற்றப்படும் என்று சென்னை ஆட்சியர் சண்முக சுந்தரம் தெரிவித்துள்ளார். சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து நீர்நிலைகளிலும் ஆக்கிரமிப்புகள் தொடர்ந்து அகற்றப்படும் என்று ஆட்சியர் சண்முக சுந்தரம்  அறிவித்துள்ளார். மேலும்ஆக்கிரமிப்புகளை அகற்றும்போது வணிக கட்டடங்கள், கல்லூரிகள், ஓட்டல்கள் உள்ளிட்ட எவையும் இந்த நடவடிக்கைகளிலிருந்து தப்பிக்க இயலாது என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார். வெள்ள பாதிப்பை தடுக்கவும், மறுகுடியமர்த்தும் நடவடிக்கைகளுக்கும் மக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என சென்னை ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார். DINASUVADU