சட்டவிரோதமாக இயங்கியஆயுத உற்பத்தி நிலையத்தில் 71 நாட்டு துப்பாக்கிகள்…!!

உத்தர பிரதேசத்தில் சட்ட விரோதமாக இயங்கி வந்த ஆயுத உற்பத்தி மையத்திலிருந்து 71தூப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது. உத்தர பிரதேசம் மாநிலம் உள்ள எடாஹ் நகரில் சட்டவிரோதமாக ஆயுதங்கள் தயாரிக்கப்படுவதாக கூறப்பட்டதையடுத்து அங்கு விரைந்து சென்ற அதிகாரிகள், சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த ஆயுத உற்பத்தி மையத்தை சோதனை செய்தனர்.அதிகாரிகள் நடத்திய சோதனையில் 71 நாட்டு துப்பாக்கிகளை பறிமுதல் செய்யப்பட்டு  ஜர்னல் சிங் என்பவரை காவல்துறையினர்  கைது செய்துள்ளனர். தொடர்ந்த்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.