டிக்கெட் எடுக்காத பயணிகள் மூலம் ஒரே மாதத்தில் மத்திய ரெயில்வே ஈட்டிய வருவாய் ரூ.42.15 கோடி..!

இந்திய ரெயில்களில் பயணம் செய்பவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது. பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக ரெயில்களை பயன்படுத்துபவர்கள் அதிகரித்துள்ளனர். இதனால் இந்திய ரெயில்வேயின் வருவாய் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. அதே சமயம் டிக்கெட் எடுக்காமல் ரெயிலில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. டிக்கெட் இல்லாமல் பயணம் செய்வது கண்டுபிடிக்கப்படும் பட்சத்தில் அவர்களிடம் இருந்து அபராதம் வசூலிக்கப்படுகிறது. இது தவிர அனுமதிப்பட்டதை விட அதிக அளவில் உடைமைகளை கொண்டு வருபவர்களுக்கும் அபராதம் … Read more