அம்பேத்கார் பிறந்தநாளில் சமத்துவ சமுதாயத்தை உருவாக்க சபதம் எடுப்போம்- தெலங்கானா ஆளுநர்!

இன்று அம்பேத்காரின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், இது குறித்து பேசியுள்ள தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் அவர்கள், அம்பேத்காரின் பிறந்த நாளான இன்று அவரது கொள்கை மற்றும் புகழை பரப்புவதுடன் மட்டுமல்லாமல், அம்பேத்கார் கனவு கண்ட சமத்துவ சமுதாயத்தை உருவாக்க சபதம் ஏற்போம் என கூறியுள்ளார்.