சுஷாந்தின் கால் உடைந்து இருந்தது, தற்கொலை அல்ல.! –  மருத்துவமனை ஊழியர் தகவல்.!

சுஷாந்தின் உடல் மருத்துவமனைக்கு வந்தபோது கால் உடைந்து இருந்ததாக  மருத்துவமனை ஊழியர் கூறியுள்ளார்.

தோனியின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நடித்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத், கடந்த ஜூன் மாதம் 14 -ஆம் தேதி அவரின் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். அவர் உயிரிழந்த வழக்கை தற்பொழுது சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் நடிகை ரியா சக்ரபோர்த்தியின் மொபைல் தொலைபேசியிலிருந்து அனுப்பப்பட்ட வாட்ஸ்அப் உரையாடல்களை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்பொழுது அவர் போதைப்பொருள் உபயோகித்தும், அவை தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் என்பதும் தெரியவந்தது.

இந்நிலையில் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் சகோதரி ஸ்வேதா சிங் கீர்த்தி ட்விட்டரில் ஒரு வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.அவரது பதிவில், ‘இதுபோன்ற செய்திகளைக் கேட்பது என் இதயத்தை  மில்லியன் முறை உடைக்கிறது. அவர்கள் என் சகோதரனை  என்ன செய்தார்கள்.  தயவுசெய்து அவர்களைக் கைது செய்யுங்கள்.’ என்று பதிவிட்டுள்ளார். அவர் பதிவிட்ட வீடியோவில், ‘ அதில் கூப்பர் மருத்துவமனையின் ஊழியர் என கூறும் ஒருவர் ,  சுஷாந்தின் உடல் மருத்துவமனைக்கு வந்தபோது கால் உடைந்து இருந்ததாக கூறியுள்ளார். இறந்த உடலை பரிசோதித்த  மருத்துவர்கள் கூட இது ஒரு தெளிவான கொலை, தற்கொலை அல்ல என்று கூறியதாகவும், ஆனால் இது ஒரு தற்கொலை வழக்கு என்று போலீசார் அறிவித்ததாகவும் அந்த நபர் கூறியுள்ளார்.